பெண்களை ஒரு போகப் பொருளாகவே எண்ண வைத்திடும் பல விளம்பரங்கள்! தம் இனத்தை இழிவுபடுத்துவது அறிந்தும், தம் வாளிப்புகளைக் கூசாமல் அரங்கேற்ற பணம் வாங்கி உழைக்கிறது ஒரு கூட்டம்! பணம் பாதாளம் வரை பாயும் அல்லவா? 'ஏன் இப்படிச் சிறுமைப்படுத்துகின்றீர்' என, தன் ஆதங்கத்தை எவரேனும் சொன்னால், 'உன் பார்வையில்தான் உள்ளது கோளாறு; உன் மனத்தில்தான் உள்ளது வக்ரம்' என்று பெரிய அறிவிப்பைச் செய்து, தம் பார்வை அரிய கொள்கை உடையதுபோல் பேசுவர்! மனிதனின் நல்ல பண்புகளை மேம்படுத்த, மனித வர்கம் முயல வேண்டாமா? அவன் மிருக வெறியினைத் தூண்டும் வகையில், பெருக விடலாமோ பல விளம்பரங்களை? :hiya