பொங்கி வழியும் பால் போல் பொங்கி வழியட்டும் ஆனந்தம் அரிசியுடன் வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்து பொங்கல் சமைத்து ஏலக்காய் கிராம்பு சேர்த்து வெண்ணை உருக்கி நெய்யாக்கி நெய்யில் முந்திரி பருப்பு வதக்கி சிறிதளவு பச்சை கற்பூரம் பொடித்து ஆக்கிய பொங்கலில் கொட்டி கிளறி வாழை இலையில் பரப்பி வைத்து கற்பூர ஆரத்தி காட்டி சூரிய பகவானுக்கு சமர்ப்பிப்போம்
இனிய படைப்பு பெரியம்மா! பதமாக எல்லாம் சேர்த்து பக்குவமாய் சமைத்தால் சர்க்கரைப்பொங்கல் ! வரும் சோதனைகளை இறை நம்பிக்கையுடன் சந்தித்தால் நம் வாழ்வில் இன்பப்பொங்கல் !! தை பிறந்தால் வழி பிறக்கும் !! இனிய பொங்கல் வணக்கங்கள் மா !
ராம் மிக்க நன்றி .நீண்ட நாட்களுக்கு பின் இங்கு தங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி .என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .