எழுந்திரு! போதும் அழுதது நீ! இனி எழும் விடியல்கள் உனக்காக, என நம்பி மறுபடி முயன்றிடு நீ! சோகத்தில் விழுவது எதற்காக? வென்றவரை நீ போய் கேட்டுப் பார்! அவர் தோல்விகள் குறித்து சொல்லிடுவார். தோல்வியதை பார்த்திடாமல் யார் வெற்றியை எப்போதும் அடைந்திடுவார்? தோல்வியிலே நாம் பாடம் படிப்போம்! நம் தவறுகள் தொடராமல் தடுப்போம்! தெரியாதன கேட்டு தெரிந்துகொள்வோம்! தெளிவாய் நாம் மறுபடி முயன்றிடுவோம்! ஒருவேளை மீண்டும் தோல்வியையே சந்தித்தால் அப்போதும் நாம் தளரோம்! வெல்வோம் நிச்சயமென உறுதி கொண்டே மீண்டும் தொடர்வோம்! நாம் வென்றிடுவோம்! முடியாது! எனும் அச்சொல் இனிமேல் கிடையாது நம்மிடம் எனக் கொள்வோம்! விடியாத இரவொன்று கிடையாதே! விலகாது முயற்சியைத் தொடர்ந்திடுவோம்!
tholviiye vetrikku ariguri. namakku munnuthaaranamaaga silanthiyidam paadam katra gajini mugamadu irukkaare. umathu kavithai sornthu ponavargalukku vazhi kaatiyaaga irukkum Rgs
Thanks RamaVyasarajan madam for your feedback. Yes, your examples are very apt. Happy to receive another feedback. -rgs