ஒரு போதும் ஒன்று போல் இருப்பதில்லை, சில நேரம் சிலவற்றில் நோக்கம், சன நேரம் சிலவற்றில் ஈர்ப்பு, மிகு நேரம் கற்பனையில் மிதப்பு, பல மணி நேரம் வேலையில் திணிப்பு, வெகு நேரம் சரியான சலிப்பு, கண நேரம் கண்டவற்றில் களிப்பு. பல நேரம் பலவற்றில் வெறுப்பு, எதிர்காலம் நோக்கி ஒரு எதிர்பார்ப்பு, இறந்தகாலம் தந்துவிட்ட தாக்கம், என இத்தனையும் கொண்டலையும் சித்தம்! இது ஒரு போதும் ஒன்று போல் இருப்பதில்லை!
அக்கா நலமா? உங்கள் கவிதையைப் படித்துவிட்டு போகலாம் என்று தான் வந்தேன்.....நான் போய் என்ன சொல்வது? நேரம் உணர்வு இரண்டுக்கும் நீங்கள் தந்த பெயர்களைத் தெரிந்துக்கொண்டேன்