கலைமகள் கைப்பொருளே பாடல் மெட்டு. ----------------------------------------- அலைமகள் நாயகனே இங்கு அருள் தரும் கார்முகிலே நிலையில்லா வாழ்வினிலே என்றும் நின்னடி தான் புகலே அலைமகள் நாயகனே இங்கு அருள் தரும் கார்முகிலே வேறார் எமை காக்க? இந்த வினைக்கடல் மீட்டு கரை சேர்க்க வேறார் எமை காக்க? இந்த வினைக்கடல் மீட்டு கரை சேர்க்க பாரா முகம் ஏனோ ? பாரா முகம் ஏனோ ? உந்தன் வாசலிலே நான் யாசித்தேன் நிலையில்லா வாழ்வினிலே என்றும் நின்னடி தான் புகலே அலைமகள் நாயகனே இங்கு அருள் தரும் கார்முகிலே நித்தமும் உன்னையே தானறிவேன் - உனை விட்டுவோர் தேவனை நானறியேன் நித்தமும் உன்னையே தானறிவேன் - உனை விட்டுவோர் தேவனை நானறியேன் எத்தனை துன்பங்கள் வந்திடினும் எத்தனை துன்பங்கள் வந்திடினும்- என்றும் உன்பெயர் ஒன்றையே நானறிவேன் அலைமகள் நாயகனே இங்கு அருள் தரும் கார்முகிலே நிலையில்லா வாழ்வினிலே என்றும் நின்னடி தான் புகலே அலைமகள் நாயகனே இங்கு அருள் தரும் கார்முகிலே - Venkatesh