அதிகாலைப் பனியில் உன் கைக்கோர்த்து நடக்க ஆசை மலர்கள் மொட்டவிழ்வதை உன்னோடு சேர்ந்து ரசிக்க ஆசை களைப்புறும் வேளையில் உன் தோள் சாய ஆசை உணவுண்ணும் போதினில் நீ ஊட்டிட உண்ண ஆசை..... உன் கண்ணோடு கண் கலக்க ஆசை உன் குறுஞ்சிரிப்பில் ஸ்தம்பிக்க ஆசை உன்னோடு வாயாட ஆசை உன்னை சீண்டி வம்பிழுக்க ஆசை நீ சமாதானம் செய்கையில் கொள்ளை ஆசை..... உன் அக்கறையில் மெய்மறந்திட ஆசை உன் அதட்டலில் அடங்கிட ஆசை உன் அன்பினில் கரைந்திட ஆசை உன் கண்டிப்பில் கலங்கிட ஆசை உன் நேசத்தில் நெகிழ்ந்திட ஆசை உன் காதலில் உருகிட ஆசை..... என்றென்றும் உன் அருகினில் நான் வாழ ஆசை....!!!!!!!!