புகைப்படத்தில் பார்த்துவிட்டு கடவுளை வேண்டினேன்.. ஐந்து நிமிடம் பேசிவிட்டு தலையை ஆட்டினேன்.. அம்மாவிடம் நம்பர் வாங்கி கைகளை பிசைந்தபடி பேசினேன்.. மறுபடியும் சந்தித்ததும் தேதி குறித்தார்கள்.. கோயிலும் திரையரங்கமும் கூட சந்திப்பதற்காக என்று அறிந்தேன்.. என்னுடன் பழகி வெகுசீக்கிரத்தில் பரிசு கொடுத்தது நீ மட்டுமே.. என் கைகளைப் பிடித்ததர்காகவே அந்த மோதிரத்தை விரும்பினேன்.. செல்போனை விரும்பினேன்.. நெட்வொர்க் [FONT="]பிரச்சனைகளை[/FONT] வெறுத்தேன்.. உன் பழைய பைக்கை விரும்பினேன்.. டிராபிக்கை அதை விட விரும்பினேன்.. மப்ட்யில் டிடேக்டிவ் ஆகி உன் பொய்களுக்கு அழுதேன்.. செல்போன் மணி ஒலித்ததும் வரலாறு டீச்சர் ஆனேன்.. உன்னுடன் உரையாடல் ஓய்ந்ததும் நண்பர்களின் ரேடியோ ஆனேன்.. ஒன்றாம் தேதி வந்ததும் ப.சிதம்பரம் ஆனேன்.. பயிலாமலேயே வசியம் செய்தேன்.. திருமதி என்ற பட்டத்தோடு.. காவி வண்ண வீட்டுக்கு தேதி குறித்து பிள்ளைகளுக்கு பெயர் வைத்தேன்.. தேனிலவு புக் செய்தபிறகே சுண்டு விரல் நீட்டினேன்..
மப்ட்யில் டிடேக்டிவ் ஆகி உன் பொய்களுக்கு அழுதேன்.. ஒன்றாம் தேதி வந்ததும் ப.சிதம்பரம் ஆனேன்.. this lines r super da..