என் கடைக்கண் பார்வைக்கான உன் தவிப்பை தெளிவாக உணர்கிறேன் உன் பார்வைக்கு ஏங்கும் இந்த நொடியில்..... நீ அருகினில் இருந்தபொழுது உன் அருமை புரியவில்லை உன் விலகல் ஏற்படுத்தும் தாக்கத்தை தாங்க முடியவில்லை..... இப்பொழுது உன் அன்பின் மீது துளியும் சந்தேகமில்லை அதனை ஏற்க தயக்கமும் இல்லை..... மன்னிப்பாயா... எனை மணப்பாயா.....
நல்ல வரிகள் AcCool. பிரிவின் ஏக்கமும், தவிப்பும், ஆசையும் தெரிந்தன உங்கள் வார்தைகளில். வாழ்த்துக்கள்! அருகிருக்கும் பொருளை பெரிதுபடுத்தாது இருப்பது என் தவறுகளில் ஒன்று தான். அது போனதும், வருந்தி பெரிதும் தவிப்பதும் என் இயல்பான குணங்களில் ஒன்றே தான்! நுண்ணோக்கி கொண்டு சிறிய பொருளை பெரிதும் அறிந்து கொள்வது போல் இல்லாது உன் அருமைமிகு அன்பை அன்றே உணர்ந்தேன் என் அன்பே! என் தயக்கம் என்னை உன்னிடத்தே வர விடாது செய்தது அன்றைக்கு! பெருங்கலக்கம் மட்டும் என்னிடத்தே எஞ்சி இருக்குது இப்பொழுது! இல்லாமையில் உன் இருப்பின் அருமை தெரிந்தேன்! தெளிந்தேன்! இனி நானே உன்னுடன் இருப்பது தான் அருமை என ஒரு முடிவுக்கும் வந்தேனே!
மிக்க நன்றி sir....... தங்கள் கவி வரிகளிலும் நான் அதனையே உணர்கிறேன் sir........ அருமையான வரிகள்.........