என் சிந்தனைக்குள் புகுந்து எனை சித்திரவதை செய்வது ஏன்....... காதல் வேண்டாமென விலகி ஓடியவளை உன் அன்பால் கட்டிப்போடுவது ஏன்....... பதில் சொல் என கெடு வைத்தாய் என்னவென்று நான் சொல்வேன்...... உனை வேண்டாமெனக் கூறும் தைரியம் எனக்கில்லை உன்னை ஏற்கும் சூழலும் எனக்கில்லை...... உன்னைப் புரிந்தும் புரியாததாய் நான் நடந்தால் என்னைத் தெரிந்தும் தெரியாததாய் நீ நடிக்கிறாய்....... விலகிச் செல் எனை விட்டுச் செல் என் விழிகளில் விழாமல் செல் என் நினைவிலிருந்து நீங்கிச் செல்...............