1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்

Discussion in 'Stories in Regional Languages' started by deva12, Feb 9, 2013.

  1. deva12

    deva12 Silver IL'ite

    Messages:
    37
    Likes Received:
    52
    Trophy Points:
    58
    Gender:
    Female
    ஆதி பயண களைப்பில் அசதியாய் தூங்கி கொண்டிருக்க காலிங் பெல் அடித்தது. பாதி தூக்கத்தில் எழுந்தவன் கடிகாரத்தை பார்க்க மணி ஐந்தை காட்டியது.

    எழுந்து சென்று கதவை திறந்தவன் எதிரில் நின்றிருந்தவரை பார்த்து அசையாமல் நின்றான்.

    என்ன சார் வீட்டுக்கு வந்தவங்களை வாங்க கூப்பிட மாட்டீங்களா?
    இன்னும் அவன் அசையாமல் நின்றிருந்தான் யாரை பார்த்துனு கேட்கிறீங்களா? வேற யாரு நம்ம ஆதிரா தான்.

    ஆதிரா ஆதியின் கையில் நறுக்கென்று கிள்ள ஆ அம்மா ஏன்டி கிள்ளுற?

    பின்ன நீங்க கனவா? நனவான்னு? தெரியாம நின்னுகிட்டு இருக்கீங்களே அதுக்கு தான். இப்ப தெரியுதா நிஜம் தான்னு என சொல்லி அவனை இடித்து கொண்டு உள்ளே சென்றாள்.

    ஆதியும் ஆதிராவை தொடர்ந்து பின்னால் வர அங்க இருக்க லக்கேஜ்ஜ யாரு எடுத்துட்டு வரது போய் எடுத்துட்டு வாங்க.


    அவன் ஆதிராவை முறைத்து கொண்டு நிற்க என்ன மாமா இன்னும் போலையா? என்னோட செல்லம்ல போய் எடுத்துட்டு வா மாமா.

    அதற்கு அடுத்த நொடி ஆதி கையில் பெட்டியுடன் உள்ளே நுழைந்தான்.

    ஆதவ் பிரஷ் பண்ணிட்டு வாங்க காபி போட்டு வைக்கிறேன் என கூறி நேரே கிட்சனுக்கு சென்றாள். ஆதவனிடம் ஒரு கப்பை நீட்டீனாள்.

    அதை குடிக்க ஆரம்பித்தவனின் முகம் சுருங்கியது.

    என்னடி காபில இனிப்பே இல்ல?

    சர்க்கரை போட்டா தானே இருக்கும் என நக்கலாக பதில் கூறினாள் ஆதிரா.

    ஏன் சர்க்கரை அங்க தானே இருக்கு நீ பார்க்கலையா?

    ஓ பார்த்தேனே

    அப்புறம் ஏன்டி சக்கரை போடல?

    அது வந்து உப்பு போடலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க.

    அடிப்பாவி நீ அக்கறையா காபி போட்டு தரன்னு சொன்னப்பவே நான் யோசிச்சிருக்கனும்.

    எனக்கு சாக்கரை இல்லாத காபிய குடுத்ததுக்கு பனிஷ்மென்ட் நீயும் இந்த காபிய குடி என அவளை நோக்கி நகர ஐய்யோ ஆதி பிளீஸ் நான் சும்மா விளையாட்டுக்கு பண்ணேன் வேணும்னா சர்க்கரை போட்டு இன்னொரு காபி கொடுக்கட்டுமா?

    அதெல்லாம் முடியாது இந்த காபியை குடிக்கனும் அதுதான் உனக்கு பனிஷ்மென்ட்.

    ஆதிரா பின்னே நகர்ந்துகொண்டு செல்ல சுவற்றில மோதி நகர முடியாமல் நின்றாள்.

    ஆதவன் இதுக்கு மேல் நீ போக முடியாதென தன் இரு கைகளையும் ஆதிராவின் இருபக்கத்திலும் வைத்தான்.

    இவ்வளவு அருகில் அவனை எதிர்பார்க்காத ஆதிராவின் இதயம் வே கமாக துடிக்க ஆதவன் அவளை இன்னும் நெருங்கினான்.

    அவனின் மூச்சுகாற்று அவள் மேல் பட்டு சூடு ஏற்றியது.

    ஆதவன் நான் போகனும் என கூற எண்ணி வாய் திறந்தவளின் வாயில் இருந்து காற்று தான் வந்தது.

    உனக்கு வேற பனிஷ்மென்ட் வச்சிருக்கேன் ஆதி.

    என்ன என்று ஆதிரா கண்ணால் கேட்க ஆதவன் தன் இதழ்களால் ஆதிராவின் செவ்விதழ்களை மூடினான்.

    என்னையும் கொஞ்சம் கவனிங்க என கிட்சனில் இருந்து குக்கர் விசில் அடிக்க இருவரும் சுயநினைவிற்கு வந்தனர். ஆதவன் ஒன்னும் நடவாததுபோல் குளிக்க செல்ல ஆதிரா தன் வெட்கத்தை மறைக்க பெரும் பாடு பட்டுக்கொண்டிருந்தாள்.

    அவன் குளித்து முடித்து வர ஆதிரா சமையலை முடித்துவிட்டு இருவரும் கதிரவனை பார்க்க கிளம்பினர்.

    ஆதவன் தன் வண்டியை கிளப்பி கொண்டு நின்றிருக்க ஆதிரா தயக்கமாய் நான் ஆட்டோல வந்துடுறேன்.

    ஏன் ஆதி பயப்படாம உட்க்காரு. மாமா நல்லாவே வண்டி ஓட்டுவேன். அவள் இன்னமும் தயங்கிகொண்டு இருக்க அதவன் சீக்கிரம் உட்காரு ஆதி டைம் ஆயிடுச்சு அப்பா பசியோட காத்துகிட்டு இருப்பாங்க. ஆதவன் தான் ஏறாமல் கிளம்ப மாட்டான் என தெரிய ஆதிரா ஏறினாள்.
     
    2 people like this.
  2. krishnaroopa

    krishnaroopa Junior IL'ite

    Messages:
    29
    Likes Received:
    10
    Trophy Points:
    13
    Gender:
    Female
    Nice update.. if you could post full story.. it would be better.. could not wait for each updates
     
  3. sindhu06

    sindhu06 New IL'ite

    Messages:
    15
    Likes Received:
    9
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hey really nice ya...Waiting for next one...
     
  4. vetrikalpanavel

    vetrikalpanavel Senior IL'ite

    Messages:
    35
    Likes Received:
    10
    Trophy Points:
    23
    Gender:
    Female
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    nice update... :-D but very small one... :-(
     
  6. deva12

    deva12 Silver IL'ite

    Messages:
    37
    Likes Received:
    52
    Trophy Points:
    58
    Gender:
    Female
    ஆதவனும் ஆதிராவும் ஹாஸ்பிட்டல் உள்ளே இருவரும் ஒன்றாய் நுழைய கதிரவனும் வள்ளியும் முகத்தில் புன்னகையுடன் இருவரையும் வரவேற்றனர்.

    பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்ப மறுபடியும் ஆதிரா வண்டியில் ஏற தயங்க ஆதவன், ஆதிரா உனக்கு இப்ப என்ன தான் பிரச்சினை உனக்கு என் கூட வர பிடிக்கலையா?

    அதில்ல ஆதி நாம ரெண்டு பேரும் ஒன்னா போனா ஆபீஸ்ல எல்லாரும் என்ன நினைப்பாங்க அது தான் கொஞ்சம் தயக்கமா இருக்கு.

    ஆதிரா என்னைக்கு இருந்தாலும் நம்ம விஷயம் தெரியத்தான் போகுது அதுவும் இல்லாமா நீ ஏன் மத்தவங்களுக்காக பயப்படுற?

    இப்ப நீ ஏற போறீயா இல்லையா?

    ஆதிராவும் வேறு எதுவும் பேசாமல் ஏற இருவரும் தங்கள் அலுவலகத்தை அடைந்தனர்.

    வண்டியை நிறுத்திவிட்டு ஆதவன் ஆதிராவின் கை பிடித்து உள்ளே அழைத்து செல்ல அனைவரின் பார்வையும் இவர்கள் மேல் ஒரு நிமிடம் நிலைக்க ஆதவன் அனைவரிடமும் ஃபிரண்ட்ஸ் இது அதிரா உங்களுக்கே தெரியும் பட் தெரியாதா ஒரு விஷயம் இவங்க என்னோட வொயிப்.

    உங்க யாரையும் கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணமுடியல சோ சாரி ஃபிரண்ட்ஸ் என கூற அனைவரும் சிறிது நேர சலசலப்பிற்கு பிறகு ஒவ்வொருவராக வாழ்த்திவிட்டு சென்றனர்.

    ஆதிராவிற்கு எப்படி சமாளிப்பது என மனதை அறித்து கொண்டுருந்த விஷயம் இவ்வளவு சுலபமாக முடியும் என எதிர்பார்க்காதவள் கண்களாலே ஆதவனுக்கு நன்றி கோற ஆதவன் கண்ணடித்துவிட்டு தன் அறைக்கு சென்றான்.

    மதியம் அனைவரும் கேன்டினில் கூட நண்பர்கள் அனைவரும் ஆதிராவை ஒரு வழி பண்ணிகொண்டிருந்தனர்.

    நானும் உங்ககூட ஜாயின் பாண்ணலாமா என கேட்டபடி அருகினில் வந்தான் ஆதவன்.

    ஏன்ன ஆதி இப்படி கேட்டுடீங்க உங்கள சேர்த்துகலனா ஆதிரா எங்கள இன்னைக்கு உப்பு கண்டம் போட்டுருவா என இதயா கிண்டலடிக்க ஆதிராவிடமிருந்து பரிசாக முதுகில் ஒரு அடியை பெற்றாள்.

    நளா கொஞ்சம் அந்த ஷேர்ல உட்காரீங்களா என ஆதவன் ஆதிராவின் பக்கம் உட்கார கேட்க நண்பர்கள் அனைவரும் ஒ வென கத்தினர்.

    பிறகு அனைவரும் அரட்டை அடித்து கொண்டும் ஆதியை கிண்டல் அடித்துகொண்டும் சாப்பிட்டு முடித்தனர்.

    மாலை வழக்கம் போல் இதயா ஆதிராவிடம் வந்து வா ஆதி கிளம்பலாம் என்றாள்.

    ஆதிரா திருதிருவென முழிக்க என்ன ஆதி ஏதாவது வொர்க் இருக்கா? ஏன் இன்னும் கிளம்பல?

    இதயா நான் ஆதிகூட போறேன் ஆதி வெயிட் பண்ண சொன்னாரு என கூற அதற்கு இதயா ம்ம் ஆமா இனிமே நீங்க எங்க கூடலாம் வருவீங்கள?

    அந்த நேரம் ஆதவனும் வர என்ன இதயா நானும் பார்த்துகிட்டு இருக்கேன் நீங்களாம் ரொம்ப தான் என் ஆதியா ஓட்டிகிட்டு இருக்கீங்க.

    பாருடா இவளுக்கு நீங்க சப்போர்ட்டா? ம்ம் நடத்துங்க நடத்துங்க இனிமே இங்க இருந்தா என்னை ரெண்டு பேரும் வெளிய தள்ளுனாலும் தள்ளூவிங்க அதுக்கு முன்னாடி நானே கழண்டுகிறேன் என இதயா கிளம்பி செல்ல ஆதவனும் ஆதிராவும் தங்கள் வீட்டிற்கு புறப்பட்டனர்.

    இரவு உணவுக்கு சமைத்து கொண்டிருந்த ஆதிராவுக்கு துணையாக ஆதவனும் உதவிகள் செய்ய இருவரும் பேசி கொண்டே சமையலை முடித்தனர்.

    சரி ஆதி நான் ஹாஸ்பிட்டல் போறேன் கதவை பூட்டிக்கோ என ஆதவன் கிளம்பி சென்றான்.

    சிறிது நேரம் டிவி பார்த்து கொண்டிருந்தவள் சோபாவில் அப்படியே உறங்கி போனாள்.

    இரவு பத்து மணிக்கு தன்னிடம் உள்ள சாவியால் கதவை திறந்து கொண்டு வந்தவன் ஆதிராவை சோபாவில் தூங்குவதை பார்த்துவிட்டு அவளை தூக்கிகொண்டு தன்னுடைய பெட்டில் படுக்க வைத்தான்.

    காலையில் கண் விழித்தவள் தன் முகத்திற்கு அருகில் ஆதியின் முகம் பார்த்து சற்று நேரம் தான் எப்படி இங்கே வந்தோம் என யோசித்து கொண்டிருக்க ஆதியும் கண் விழித்தான்.

    இருவரும் எழுந்து தங்கள் வேலைகளை முடித்துவிட்டு வழக்கம்போல் ஹாஸ்பிட்டல் சென்றனர். பிராஜெக்ட் முடிக்க இன்னும் பத்து நாட்களே இருக்க இருவரும் நேரம் இல்லாமல் உழைத்து கொண்டிருந்தனர்.

    ஒருவாரம் கழித்து கதிரவன் ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டிற்கு டிஸ்சார்ஜ் ஆகி வந்தார்.

    அன்று ஞாயிற்று கிழமை என்பதால் வள்ளியும் ஆதிராவும் சமையல் செய்து கொண்டிருந்தனர்.

    அனைவரும் மாலை பீச்சுக்கு போகலாம் என ஆதிரா கூற ஆதி தனக்கு வேளை இருப்பாதாக சொல்ல வள்ளியும் தனக்கு சோர்வாய் இருப்பதால் வரவில்லை என கூறினார். அதைகேட்ட ஆதிராவின் முகம் வாட கதிரவன் நான் வரேன்டா ஆதிரா எனக்கும் வீட்டுக்குள்ள இருந்து ரொம்ப போர் அடிக்குது என்ன கூட்டிட்டு போறீயா?

    அதுக்கென்ன மாமா நீங்க கிளம்பி ரெடியா இருங்க நாம ரெண்டு பேர் மட்டும் போகலாம்.
    ஆதிராவும் கதிரவனும் மாலை பீச்சுக்கு கிளம்பி செல்ல அனைத்து விஷயத்தையும் பேசி கொண்டு சென்றனர்.

    என்ன மா இன்னும் அவங்க ரெண்டு பேரும் வரலையா?என்றபடி உள்ளே நுழைந்தான் ஆதவன்.

    இல்லடா இன்னும் வரல கொஞ்சம் போன் பண்ணிபாருடா.

    ஹலோ ஆதி எங்கே இருக்கீங்க?

    ஆதவ் இன்னும் அரை மணிநேரத்தில வந்துடுவோம்.

    மாமா ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?

    வேண்டாம் ஆதிமா. நாளைக்கு சாப்பிடலாம் இப்ப ரொம்ப நேரமாச்சு என கதிரவன் கூற ஆதிரா மாமா நீங்க இப்ப எனக்கு ஐஸ்கிரீம் வாங்கிகொடுத்தீங்கனா நாளைக்கு உங்களுக்கு பிடிச்ச பாயாசம் பண்ணி தரேன் என தாஜா செய்து இரண்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டாள்.

    இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். நள்ளிரவில் ஆதிரா முனங்க ஆதவன் என்னவென்று பார்க்க ஆதிராவின் உடம்பு சூடாக இருந்தது.

    அவளை எழுப்பி ஒரு பேராசிட்டமால் கொடுத்தான். பின் அரை மணிநேரத்தில் ஆதிரா தூங்கிவிட ஆதவனும் கண் அயர்ந்தான்.

    உடம்பு அசதியாய் இருக்க காலை ஏழு மணிக்கு எழுந்தவள் அரக்கபரக்க கிளம்பினாள். நல்ல வேளை தப்பிச்சோம் ரெண்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டது ஒன்னும் பண்ணல என எண்ணிகொண்டு தன் சாப்பாட்டை முடுத்தவள் ஆதியுடன் கிளம்பினாள்.

    அலுவலகம் முடித்து வந்தவள் மாமா போலாமா என்றபடி உள்ளே நுழைந்தாள் ஆதிரா.

    என்னடி என்கிட்ட சொல்லவேயில்லை?

    என்ன சொல்லனும் ஆதவ்?

    எங்கேயோ போலாமானு கேட்டியே என்கிட்ட எங்க போறோம்னு சொல்லவேயில்லை.

    அய்யே ஆசைய பாரு உங்கள ஒன்னும் மாமானு கூப்பிடல அதுவும் இல்லாமா உங்களுக்கு வேளை நிறைய இருக்கும் என சொல்லி கொண்டிருக்கும்போதே கதிரவன் வந்தார்.

    ரெண்டு பேரும் இப்ப எங்க கிளம்பிட்டீங்க? என்றான் ஆதவன்.

    கோயிலுக்கு என ஆதிர சொல்ல பார்க்கு என கதிரவன் சொல்ல இருவரும் நாக்கை கடித்து கொண்டனர்.

    கோயிலுக்கா பார்க்குக்கா என ஆதவன் வினாவ ரெண்டுக்கும் என சொல்லிமாட்டி கொண்டனர்.

    இப்ப எங்க போறீங்கன்னு சொல்றீங்களா இல்லையா என ஆதவன் குரலில் கடுமை தெரிய ஆதிரா ஐஸ்கிரீம் சாப்பிட போறோம் என்றாள்.

    நேற்று எத்தனை ஐஸ்கிரீம் சாப்பிட்ட என ஆதி கேட்க ஆதிரா ஆச்சரியத்துடன் ஆதி உங்களுக்கு எப்படி தெரியும்?

    அது இப்ப ரொம்ப முக்கியம் கேட்டது பதில் சொல்லு என்றான் ஆதவன் கோபத்துடன்.
    ரெண்டு என்றாள் ஆதிரா.

    ஓ அது தான் நைட் ஜூரமா?

    இனிமே நீ ஐஸ்கிரீம் சாப்பிட்ட என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என கோபமாக கூறிவிட்டு உள்ளே சென்றான் ஆதி.

    இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு இவனுக்கு இவ்ளோ கோபம் வருது. அவனா வந்து பேசுற வரைக்கும் நான் பேச மாட்டேன் என ஒரு சிறிய விஷயத்தை பெரிதாக எடுத்து கொள்ள அதன் பின் விளைவுகள் தெரியாமல் உறங்கினாள்.
     
    2 people like this.
  7. sindhu06

    sindhu06 New IL'ite

    Messages:
    15
    Likes Received:
    9
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Nice update ya... Very interesting... Keep going...
     
  8. deva12

    deva12 Silver IL'ite

    Messages:
    37
    Likes Received:
    52
    Trophy Points:
    58
    Gender:
    Female
    மறுநாள் கதிரவனும் வள்ளியும் ஊருக்கு கிளம்பினர்.

    ஒருவார விடுமுறைக்கு பின் அன்று தான் நிலா அலுவலகத்திற்கு வந்தாள். ஆதவனின் கல்யாணத்தை பத்தி கேள்விபட்டவள் நேரே ஆதியிடம் வந்து என்ன ஆதி இப்படி பண்ணிட்ட?

    என்ன நிலா திடிர்னு வந்து இப்படி கேட்குற? நான் என்ன பண்ணேன்?

    ஏன் உனக்கு கல்யாணம் ஆனதை என்கிட்ட சொல்லல?

    உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு இல்ல நிலா எங்க ரெண்டு பேருக்குமே இந்த மேரேஜ்ல விருப்பம் இல்ல. பட் இப்ப ரெண்டு பேருமே லவ் பண்றோம்.

    ஆதிரா தன்னுடைய ரிப்போர்ட்டை எடுத்து கொண்டு உள்ளே வர இருவரின் பேச்சும் தடைப்பற்றது.

    நிலா, கங்ராட்ஸ் ஆதிரா எப்படியோ ஆதிய மயக்கிட்ட என்றாள் சிரித்துகொண்டே. அவளின் பேச்சில் ஏதோ ஏமாற்றம் இருப்பதாக தோன்றியது அதிராவிற்கு.

    ஆனால் ஆதியோ இதெல்லாம் தெரியாமல் ஆமா நிலா சரியான மாய மோகினி என்றான் ஆதிராவை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே.

    ஆதிரா பதிலேதும் கூறாமல் ஆதவனை முறைத்து கொண்டு இருக்க ஏதோ இருவருக்குள்ளும் நிலாவின் சண்டையென நிலா ஊகித்தாள்.

    நிலாவின் எண்ணபடியே ஆதியும் ஆதிராவும் சரியாக பேசிகொள்ளவில்லை. நிலாவும் அந்த வாய்ப்பை தனக்கு சாதகப்படுத்த எண்ணி ஆதிராவை காண சென்றாள்.

    தன்னை பார்த்தாலே சரியாக பேசாதவாள் தன்னை காண வந்திருப்பதை பார்த்து யோசித்து கொண்டிருந்தாள் ஆதிரா.

    என்ன ஆதிரா உனக்கும் ஆதிக்கும் ஏதாவது சண்டையா?

    ஆதிரா குழப்பத்துடன் நிலாவை பார்க்க எனக்கு எப்படி தெரியும்னு யோசிக்கிறீயா? ஆதிதான் சொன்னான்.

    இன்னமும் ஆதிராவின் குழப்பத்தை அதிகரிப்பதை பார்த்தவள் தனக்கு சாதகபடுத்தி கொண்டு எனக்கு ஏன் அவன் சொல்லம்னு யோசிக்கிறீயா?

    இந்தா இதப்பாரு உனக்கே தெரியும் என ஆதிராவிடம் ஒரு புகைபடத்தை நீட்டினாள் நிலா.

    அதை பார்த்த ஆதிராவின் கண்கள் கோபம், ஏமாற்றம், வலியென வெவ்வேறு உணவுர்களை காட்டியது. இதை பார்த்த நிலா தன் திட்டம் வெற்றியடைந்ததை நினைத்து சிரித்து கொண்டாள்.

    இதுல இருக்கறது யாருன்னு தெரியுதா?

    ஆதவன் தான். நானும் ஆதவனும் காலேஜ்ல படிக்கும்போது எடுத்து கிட்டது. எனக்கு போட்டோஸ் எடுக்கறதே பிடிக்காது. பட் ஆதவன் தான் என்னை தினமும் பார்த்துகிட்டு இருக்கனும்னு ரொம்ப கெஞ்சினான்.

    நீ என்ன சொல்றனு எனக்கு புரியலை என ஆதிரா கேட்க உனக்கு இன்னும்மா புரியலை ஆதி என்னை காலேஜ் படிக்கும்போதே லவ் பண்ணினான். ஆனா எனக்கு அவன் மேல அப்படி ஒரு எண்ணமே இல்ல. நானும் பெங்களூர் போய்ட்டேன். பட் இப்ப மிஸ் பண்ணிட்டேனு தோணுது.

    ஓகே ஆதிரா எனக்கு டைம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன் என தன் வேளையை முடித்த நிம்மதியுடன் நிலா கிளம்ப ஆதிராவின் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் தோன்றின.

    அவள் தலையை பிடித்து கொண்டு உட்கார்ந்திருக்க ஆதவன் அவளருகே வந்து ஆதி கிளம்பலாமா? என்றான்.

    அவனின் முகத்தை பார்க்காமல் எனக்கு வெளிய கொஞ்சம் வேளை இருக்கு நீங்க கிளம்புங்க என்றாள் ஆதிரா.

    நான் வேணும்னா டிராப் பண்ணட்டுமா என ஆதவன் கேட்க வேண்டாம் என்றாள் ஒற்றை வார்த்தையில். ஆதவன் அவள் இன்னும் கோபமாக இருப்பதாக நினைத்து கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் எப்படியாவது சமாதானம் செய்துவிட வேண்டும் என எண்ணினான்.

    ஆதிரா வெகு நேரம் ஆபீஸில் உட்கார்ந்திருந்தாள். பிறகு எங்கே போவது என தெரியாமல் அருகே இருந்த கோவிலுக்கு சென்றாள். அங்கேயே உட்கார்ந்து இருந்தாள்.

    ஆதவனிடம் இருந்து அழைப்பு வர அதிரா அட்டென்ட் செய்தாள்.
    எங்கடீ இருக்க டைம் என்னாச்சுனு தெரியுமா?

    தன் வாட்சை திருப்பி பார்த்தாள். அது மணி ஒன்பதை காட்டியது.
    உன்கிட்ட தான் கேக்குறேன் அதி.

    நீ எங்க இருக்கனு சொல்லு நானே வந்து கூட்டிட்டு போறேன்.
    இல்ல வேண்டாம் நானே வந்துட்டேன் என போனை கட் செய்தாள்.

    அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டுற்கு வந்தவள் நேரே அறைக்கு செல்ல ஆதவன், ஆதி வா சாப்பிடலாம் என சாப்பிட அழைக்க எனக்கு வேண்டாம் நீங்க சாப்பிடுங்க என கூறி மற்றொரு அறையில் சென்று படுத்து கொண்டாள்.

    தன் ரூமிற்கு வந்த ஆதவன் அங்கே ஆதிரா இல்லாததை கண்டு பக்கத்து அறையில் பார்க்க அங்கே ஆதிரா படுத்து இருந்தாள்.

    என்ன ஆதி இங்க படுத்திருக்க வா நம்ம ரூமிற்கு போகலாம் என அழைக்க ஆதிராவிடமிருந்து பதில் இல்லாமல் போக அவள் கண்மூடியிருந்ததை பார்த்து தூங்கிவிட்டதாய் நினைத்து வெளியே சென்றான்.
     
    1 person likes this.
  9. sindhu06

    sindhu06 New IL'ite

    Messages:
    15
    Likes Received:
    9
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Interesting ya... Keep going... Pls mudinja rendu episode ah podunga....:):):)
     
  10. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    villi thannoda velaiya kaamichutaale...

    how adhi is going to console adhira?
    update next part soon... :)
     

Share This Page