1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் மனம் அறிவாயோ?-10

Discussion in 'Stories in Regional Languages' started by devikamurugan, Jun 20, 2012.

  1. devikamurugan

    devikamurugan Silver IL'ite

    Messages:
    25
    Likes Received:
    61
    Trophy Points:
    58
    Gender:
    Female
    ஹே ஷக்தி எப்படி இருக்க?

    பைன் டி. நீ எப்படி இருக்க?

    ம்ம் இருக்கேன்டி.

    என்னடி ராம் உன்ன நல்லா பாத்துக்கிறானா?

    அதற்குள் ஷக்தியின் மொபைல் சிணுங்க ஒரு நிமிஷம் தேவி என்று எழுந்து சென்றாள்.

    அவள் வருவதற்குள் அவளை பத்தி ஒரு சின்ன இன்ட்ரோ.

    தேவியின் நெருங்கிய தோழி. இவர்களின் நட்பு கல்லூரி சேர்ந்த முதல் நாளிலே மலர ஆரம்பித்தது.

    தேவி, ராமுடன் பழக ஆரம்பித்ததிலிருந்து ஷக்திக்கும் ராமை தெரியும்.

    என்னடி இப்ப தானே கல்யாணமாச்சு. இவ்வளவு சோகமா இருக்கே?

    கல்யாணாம் மட்டும் தான்டி ஆச்சு. நான் அவன் கூட பேசவேயில்லைடி.

    என்னடி சொல்ற? நீ அவனை லவ் பண்ணதானே?

    இன்னமும் லவ் பண்றேன்.

    தென் வாட் டி?

    நான் மட்டும் தான் லவ் பண்றேன். அதான் பிரச்சனை.

    இன்னும் அவன் மாறவேயில்லையா?

    எனக்கு தெரியல ஷக்தி. ஆனா எதுக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சானு தெரியல.

    சரி விடு தேவி. அதையே நினைச்சுகிட்டு இருக்காதே.

    நீ இஷ்டப்பட்டு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சியோ இல்லையோ.

    உனக்கும் அவனுக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சு. இனிமே நீ அவங்குட தான் வாழனும்.

    இது மாதிரியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தான் அவனை மறந்திடுன்னு சொன்னேன்.

    நீ தான் கேக்கல என்று பேசிக்கொண்டே போனவள் தேவியின் முகம் வாடுவதை கண்டு அத்தோடு அந்த பேச்சை நிறுத்தினாள்.

    தங்கள் கல்லூரி கதைகளை பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு நேரம் போவதே தெரியவில்லை.

    இரவு எட்டு மணிக்கு வீட்டுக்கு சென்றாள் தேவி.

    வீடு பூட்டியிருந்ததால் வெளியே நின்று இருந்தான் ராம்.

    அவனை பார்த்தவுடன் அவசரமாக கதவை திறந்து உள்ளே சென்றாள்.

    வீட்டுக்கு வரும் வழியில் பலவாறு யோசித்து ராமுடன் பேசுவதென்று முடிவு செய்தாள் தேவி.

    என்ன பேசுவது? எல்லாம் செஞ்சுட்டு எப்படி இருக்கான். ஒவ்வொரு தடவையும் இவன்கூட நானே போய் பேசணும்.

    ச்சே அன்னைக்கு வந்து அவன் பேசும்போது நீ தானே பேசவேண்டாம்னு அழுத? என்று அவள் மனசாட்சி உறைக்க தன் தலையில் ஒன்று போட்டுக்கொண்டாள்.

    இப்போ என்னன்னு அவன்ட்ட போய் பேசுவது என்று யோசித்துக்கொண்டே அவன் ரூமிற்க்குள் சென்றாள்.

    அவளை கவனிக்காமல் யாருடனோ சிரித்து பேசிக்கொண்டிருந்தான்.

    அவன் பேசி முடித்தவுடன் வரலாம் என்று வெளியே சென்றவள் என்ன ரேணு பதிலே காணும் என்ற வார்த்தையில் சிலையாய் நின்றாள்.

    அதற்கு மேல் அவர்கள் பேசிய எதுவுமே காதில் விழவில்லை.

    அவள் ரூமிற்குள் சென்று கட்டிலில் விழுந்தவள் அழக்கூட தெம்பில்லாதவளாய் படுத்திருந்தாள்.

    இவன் இன்னும் திருந்தவேயில்லை. என்னனமோ நினைச்சுட்டு போனனே.

    நான் தான் இன்னும் இவனை நினைச்சுட்டு இருக்கேன்.

    இவனுக்கு சுத்தமா என்னோட நினைப்பேயில்லை என்று நினைக்க கண்களில் நீர் வடிந்து கொண்டே இருக்க அப்படியே உறங்கியும் போனாள்.

    காலையில் எழுந்தவள் சமையலை முடித்துவிட்டு தனக்கும் மதிய உணவை எடுத்துக்கொண்டு வேளைக்கு செல்கிறேன் என்று வெள்ளை தாளில் எழுதி வைத்துவிட்டு சென்றாள்.

    மாலை ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்தவள் இரவு உணவை தயாரித்துவிட்டு தன் ரூமிற்க்குள் முடங்கிக்கொண்டாள்.

    ராம் வருவதருக்குள் தூங்க செல்வதும் காலையில் அவன் எழுவதற்குள் வீட்டை விட்டு கிளம்புவதுமாக அவனை பார்பதை தவிர்த்தாள் தேவி.

    ஒரு மாதமாக அவள் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    தேவி வேளைக்கு சேர்ந்த ஒரு மாதத்தில் அவளின் கம்பெனிக்கு ஒரு ப்ராஜெக்ட் ஆர்டர் வந்தது.

    அந்த ப்ராஜெக்ட்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் உடல்நல குறைவால் விலகிவிட தேவிக்கு அந்த வாய்ப்பு வந்தது.

    அவளும் செல்வதாக ஒப்புக்கொள்ள அன்று இரவே கிளம்ப சொல்லி உத்தரவு வந்தது.

    வழக்கம் போல் ராமிற்க்கு காகிதத்தில் எழுதி தன் டைரி மேல் வைத்துவிட்டு தன் வாழ்க்கையே மாறப்போவது அறியாமல் டெல்லி சென்றாள்.
     
    2 people like this.
    Loading...

  2. yshnavi

    yshnavi Silver IL'ite

    Messages:
    159
    Likes Received:
    50
    Trophy Points:
    68
    Gender:
    Female
    nice update:thumbsup keep rocking:)
     
  3. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Ennama Devi Delhi poitala. Avanga Athai kitta kooda sollama. What will happen. Will Ram speak to her............waiting eagerly for the next update...........
     
  4. veenashankar15

    veenashankar15 Junior IL'ite

    Messages:
    45
    Likes Received:
    7
    Trophy Points:
    13
    Gender:
    Female
    Devi, Nice update.. Ennapa oru valiya pesiduvanga entru parthal ippadi Devi-i Delhi kku anupareengalae......
     
  5. devikamurugan

    devikamurugan Silver IL'ite

    Messages:
    25
    Likes Received:
    61
    Trophy Points:
    58
    Gender:
    Female
    thanx for ur comments pa
    keep reading
     
  6. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma...
    devi ram kitta pesuvannu partha delhi poitale ma...
    ram reaction epdi irukkum..
    delhi la irundhu sikkaram devi ah return vara veinga..
     
  7. Ramkumar1989

    Ramkumar1989 Senior IL'ite

    Messages:
    50
    Likes Received:
    17
    Trophy Points:
    23
    Gender:
    Male
    என்னது தே லெட்டரில் எழுதிவைக்கிறாங்க இதுக்குதான் குழந்தை வேனும்கிறது புருஷன் தப்பு செய்தால் குழந்தையை வைத்து ஜாடமாடயா ஆசைதீர திட்டி தீர்த்துக்கொள்ளலாம்
     
  8. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    ena than nadanthathu,,, sollama kollama delhi pora alavuku... :spin
     
  9. IndhuRamesh

    IndhuRamesh Platinum IL'ite

    Messages:
    1,624
    Likes Received:
    767
    Trophy Points:
    208
    Gender:
    Female
    ivanga kannamoochi mudiyave mudiyatha..?? pavam nga.. serthu vachidunga..
     

Share This Page