காராம்பசு கழுத்து மணியே கண்டாயோ என் கண்ணனை துள்ளி ஓடும் கன்று குட்டியே என் குட்டி கண்ணனை கண்டாயோ ஏன் இந்த கண்ணாமூச்சி என் குல தோன்றலே என் வீட்டு உறியில் உள்ள தயிர் வெண்ணை வேண்டாமா முறுக்கு சீடை அதிரசமும் அவல் வெல்லம் பாயசமும் அள்ளி தின்ன ஓடி வா என் ஆசை கண்ணா பட்டு பீதாம்பரமும் மயில்பீலி கொண்டையும் கையில் புல்லாங்குழலும் காலில் தண்டை கொலுசும் வாய் நிறைந்த சிரிப்பும் கொண்டு சின்னஞ்சிறு கால் எடுத்து சீரான நடை நடந்து ஓடோடி வா கண்ணா என் ஒய்யார மாய கண்ணா அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.
மாய கண்ணன் உங்கள் கவியில் லயித்த கண்ணன் சுபெர்சொனிக் வேகத்தில் வந்து சேருவார்.......அருமையான கிருஷ்ணா ஜெயந்தி கவிதை.........வாழ்த்துக்கள் மா
பேரக் குழந்தைகளுடன் - கிருஷ்ண அவதாரங்களுடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடத் தான் அங்கு சென்று விட்டீர்களே மா... கிராமீய மனம் கமழும் - பசியைத் தூண்டும் கவிதை நன்று.
வகை வகையாய்,பட்சணம் செய்து, வாசல் முதல் பாதம் தடம் பதித்து, பாங்காக அவனுருவை அலங்கரித்து, பாசமுடன் நாம் அழைக்கையில், வாராமல் போவானோ அந்த மாயவன், மாயமாய் உங்கள் வீட்டில் அமர்ந்து விட்டன, நன்றாக தேடுங்கள் அம்மா,அவன், திரையின் பின் நிற்பான்.
நன்றி நட்ஸ்.பேர குழந்தைகள் மாதவன் ,ராகவனுடன் இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்தியை சந்தோஷமாக கொண்டாடினேன்.இன்னொரு பேரன் கிருஷ்நந்தனுடன் நேரில் கொண்டாடாமல் தொலை பேசி மூலம் பேசி மகிழ்ந்தேன்.
நன்றி தீபா.உங்கள் வரவை ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருந்தேன்.கிருஷ்ணாவதாரம் பற்றி எழுதிய நீங்கள் சரியான நேரத்துக்கு வந்து விட்டீர்கள்.சந்தோஷமாக இருந்தது.
nice to read ma. you have beautifully described Kannan. hope you enjoy Krishna jayanthi with your grand sons.