மழை பெய்கிறது... மரங்கள் நனைக்கின்றன... நனையும் ஆசையைய் அடக்கிக்கொண்டு அடைபட்ட கதவுக்கு பின் அம்மாவின் அதட்டலுக்கு அடங்கிய ஐந்து வயது சிறுவன்! மழை விட்டது கதவு திறந்தது மகிழ்சியாய் ஓடினான் ... தோட்டத்து மரத்தைத் தேடி! இலைகளை அசைத்தான் கிளைகள் அசைந்தன மழை பெய்ததது மரம்! மழையில் நனைந்த மகிழ்ச்சியில்... அடிமரத்தை அனைத்து ஆசையாய் முத்தமிட்டான் ! அம்மா அறியும் முன் அறைக்குள் அடைக்கலம் ஆனான் மழையில் நனைந்த சுவடுகள் அழிக்க 'பூதுவாலை' தேடி!!!
மிகவும் அழகான வர்ணனை புஷ்பலதா...... அதா சிறுவன் போல் இந்த சிறுமி உங்கள் கவி மழையில் நினைக்கிறன்..... ஆனால் நான் வைத்திருப்பது பூதுவாலை இல்லை power puff துவாலை :hide::hide:.......... குட் நைட் .....
அன்புள்ள புஷ்பலதா, அறியா பருவத்தில் ஆசையை அடக்க தெரியாமல் மழையில் நனைந்து அடி வாங்கிய நினைவுகள் என் நினைவுக்கு வருகின்றன.