1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தின்னப் பொறந்தவன்யா திருநேலிக்காரன்

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, May 27, 2020.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பேரப்பிள்ளைகளும் மக்கமாரும்
    கண்முழிக்கும் முன்னமே
    கருக்கல்ல எந்திரிச்சு
    கனிவோடு தாத்தா
    காலமே போட்டுவச்ச
    கருப்பட்டி காப்பியும்..

    காந்திமதி அம்மனக்
    கும்பிட்ட கையோட
    வரிசைல நின்னு
    வாயூற வாங்குன
    இருட்டுக்கட அல்வாவும்...

    ‘தாம்ரவருணித் தண்ணிக்கே தனிருசில்லா’
    டவுனுப் பெரியம்ம வீட்டுல
    சட்டவட்டமாய் உக்காந்து
    சப்புக்கொட்டி தின்ன
    வெண்டக்கா சாம்பாரும்
    விதவிதமா வெஞ்சனமும்..

    கொக்கிரகுளத்து அத்த
    கூட்டிவச்ச புளிக்குழம்பும்
    பக்கத்துணையா பருப்புக்கடைசலும்
    பாவக்கா வெல்லம் போட்டுவச்ச கூட்டும்...

    உடன்குடி ஆச்சி
    உரிமயோட கொண்டுவந்து
    உருட்டிக் கைல போட்ட
    உளுந்தங் களியும்
    நடுவுல குழிவெட்டி
    நல்லெண்ண ஊத்துனதும்..

    மொளகு சேர்த்தரைச்சு
    முருங்கக்கீர போட்டுவச்ச
    புளியிலாக் கறியும்
    பொடலங்காப் பொரியலும்

    ‘வளர்ர பிள்ள..இப்பிடியா கொரிக்கது?’
    ஏசிக் கொண்டே ஆழ்வார்திருநகரி மதினி
    ஆசைஆசையா சுட்டுப் போட்ட
    தண்டித் தோசையும் தக்காளிச் சட்னியும்..

    குறுக்குத்துறைல குளிச்சுமுழுகி வந்தா
    சுடச்சுட தொண்டைல இறங்கும்
    கூட்டாஞ் சோறும் கூழ் வத்தலும்

    தொலிப்பருப்பு போட்டுசெஞ்ச
    உளுந்தஞ் சோறும்
    தோதாக அதுக்குவச்ச
    வாழக்காப் பொரியலும்
    வறுத்தரைச்ச தொவையலும்..

    ‘நாரோயிலு’ சித்தி பிரியமா வச்சுத்தரும்
    அருமையான அவியலும் அதுக்குன்னே அடையும்..

    இரயிலடிக்குக் கெளம்பினாலே
    இணைஞ்சே வந்திடும்
    மொளோடி இட்லிகளும்
    வாழையில பொதிஞ்ச
    வழித் தொகையலும்தான்

    கவிதையில அடங்குமோ..
    காத்து நிக்கையிலும் மறக்குமோ!

    மதிகெட்டுப் போனேனே..
    சொதி சொல்ல மறந்தேனே!
    கதிமோட்சம் கிட்டுமே-நல்
    விதியால் நெல்லை பிறந்தோர்க்கே!

    கோயில்பட்டி கடலமிட்டாய், சாத்தூரு காரசேவு
    குத்தாலம் பக்கத்துல பார்டர் கட பரோட்டா..
    சுத்தியுள்ள ஊர்ப்பண்டம் சேத்தே நினைச்சாக்க-மண்ட
    கிறுகிறுத்துப் போகுமையோ..
    பொறவாலே சொல்லுதேன்-தனியா ஒரு
    போஸ்ட்டு போட்டு

    இன்னம் ஒரு வரி..இத மட்டும் படிச்சிடுங்க
    தின்னப் பொறந்தவன்யா திருநேலிக்காரன்

    Jayasala 42





     
    msm and chrisju like this.
  2. chrisju

    chrisju New IL'ite

    Messages:
    5
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Hi Jayasala, Migavum nantraga irukirathu ungal padal.
     

Share This Page