1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சாப்பாடும் வாழ்வும்

Discussion in 'Stories in Regional Languages' started by Thyagarajan, Aug 4, 2018.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,744
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:
    #ரசமான_விவாதம்’ :

    பெரியவாளின் சமையல் விளக்கம்.

    "குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிலுமே பருப்பு, புளி, உப்பு, சாம்பார்பொடி பெருங்காயம் தானே இருக்கு?”

    அங்கிருந்த பக்தர்கள் “சாம்பாரை முதலிலும் ரசத்தை பின்னாலும்
    சாப்பிடுகிறோம், அதுதான் வித்தியாசம்” என்றார்கள்.

    மஹான் பெரிதாகச் சிரித்தார்.

    “குழம்பில் காய்கறி உண்டு. ரசத்தில் இல்லை. இதுதான் வித்தியாசம்” என்றார்.

    இந்தக் குழம்பையும் ரசத்தையும் வைத்து அன்று ஒரு சிறிய பிரசங்கத்தையே
    எல்லோருக்கும் விளக்கமாகச் சொன்னாராம்.

    அவர் சொன்னதன் கருத்து என்ன?

    “தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்று விட்டதால், நாம் குழம்பிப் போகிறோம். அதாவது சாம்பார் போல்…

    ஆனால் இது இல்லை என்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல. இவைகளை மறக்கக் கூடாதுங்கிறதுக்காகத் தான் தினமும் குழம்பு ரசம் வைக்கிறோம்.

    நீங்கள் விருந்துக்குச் சென்றால் குழம்பு, ரசம், பாயசம், மோர் என்று வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா?

    இந்த உணவுக்கலாசாரம் வேறு எங்கேயும் இல்லை. மனிதன் பிறக்கும் போதே அவன் மனதில் ‘தான்’ என்னும் அகங்காரம் இடம் பிடித்து வருகிறது. அவன் பலவிதமான குழப்பத்தில் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது.

    இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் ‘குழம்பு’ எடுத்துக் காட்டுகிறது. அது தெளிந்து விட்டால் ரசம் போல் ஆகிவிடுகிறது. இவற்றை தொடர்வது இனிமை, ஆனந்தம் அவைதான் பாயசம், மோர், பட்சணம், இதைப் போல் மனிதனின் வாழ்க்கைக்கும் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் பல விதமான ஒற்றுமைகள் உண்டு.

    மோர் தனித்தன்மை வாய்ந்தது. பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது உதவுகிறது. பாலிலிருந்து தயிர், வெண்ணை, நெய் மோர் என்று தொடராகப் பொருட்கள் நமக்குக் கிடைக்கின்றன. மோர்தான் கடைசி நிலை. அதிலிருந்து நீங்கள் எதையுமே எடுக்க முடியாது.

    அதனால் தான் பரமாத்மாவைக் கலந்த பின், மேலே தொட ஏதும் இல்லை என்பதை மோர்
    தெளிவாக்குகிறது. அதாவது மோர் சாதம் முடிந்தால் இலையை விட்டு எழுந்திருக்க வேண்டாமா?”

    என்று அன்றைய தினம் நீண்ட பிரசங்கமே செய்து
    விட்டார் மஹான்.

    குழம்பு-குழப்பம்
    தான்-அகங்காரம்
    ரசம்-தெளிவு
    பாயஸம்-இனிமை
    மோர்-ஆனந்தம்

    நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டைப் பற்றிய விளக்கத்தை இதுவரை,
    இதைப்போல் யாரும் சொன்னதே இல்லை.
    நன்றி நண்பர்களே.
     
    ksuji, kaniths and vaidehi71 like this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,744
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:@vaidehi71 @kaniths
    நன்றி அம்மா.
    வணக்கம்.
     
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,744
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:@ksuji நன்றி தோழரே.
     

Share This Page