தூக்கம்கலைந்தது கண் விழிக்க விருப்பம் இல்லை காகம் கரையவில்லை குயில் கூவவில்லை காலையில் எழுந்து என்ன செய்ய என்று சோம்பி கிடக்க கேட்டது ஒரு ஓசை புதிதான ஓசை சட்டென்று எழுந்தேன் திரைச் சீலை ஒதுக்கினேன் சாளரம் வழி தோட்டம் நோக்கினேன் ஆஹா என்ன ஒரு அழகு நடனம் மயில் ஒன்று தன் தோகை விரித்து நாற்புறமும் சுழன்று சுழன்று ஆடிய காட்சி கண் நிறைந்த காட்சி காணக் கிடைக்காத காட்சி இனிதாக துவங்கியது என் காலை பொழுது
அருமையாக பகர்ந்தார் பெரியம்மா ஆடியது அருமை ஆறுமுகனின் வாகனம்மன்றோ அங்கு எங்கோ பாலமுருகன் மறைந்திருந்து தாங்கள் அடைந்த பரவசத்தை பார்த்து மகிழ்ந்தான் முந்தைய நாளில் கற்றீரோ கந்தர் சஷ்டி கவசம் தன்னை! வாழ்கதங்கள் தமிழ் பற்று. வணக்கத்துடன்.
அழகிய மயில் நடனம் தாங்கள் காண தங்கள் பொழுதை அழகாக்க சோம்பலிலிருந்து துள்ளி எழ இயற்கை செய்த மாயமோ மயிலின் ஆட்டமோ நல்ல பகிர்வு பெரியம்மா
@Thyagarajan அன்பு சகோதரரே தங்கள் வருகைக்கு நன்றி .நேற்று செவ்வாய்கிழமை அந்த மயில் வந்தது செவ்வேள் முருகனின் அருள் கிடைத்தது போல ஒரு மகிழ்ச்சி தங்கள் பதில் கவிதை வடிவில் கண்டு ஆனந்தம் l
@knbg நன்றி பார்கவி சுழன்றிடும் மயில் தோகை தங்களையும் இங்கு வரவழைத்து விட்டதே .நீண்ட நாள் கழித்து வருகை புரிந்தமை கண்டு மிக்க மகிழ்ச்சி