Last lines sums it all. Everyone does deeply hope for them to tie the knot and been seen together forever because yes they do make an amazing couple, no doubt!
சின்னச் சின்ன விஷயங்களாக ஸ்கெட்ச் போட்டு, மிகப்பெரிய விஷயத்துக்காக காய் நகர்த்தி வருகிறார் ஒல்லி நடிகர் என்கிறார்கள். தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் எல்லோரின் கனவு, குறிப்பாக ஹீரோக்களின் கனவு, ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ பட்டம் நமக்கு கிடைக்காதா என்பதுதான். காரணம், அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் அந்தப் பட்டத்துக்கான மவுசு இருக்கிறது. தல, தளபதி, வம்பு, டான்ஸ் மாஸ்டர் என பலரும் தெரிந்தோ, இலைமறை காயாகவோ அந்தப் பட்டத்துக்கு அடிபோட்டு வருகிறார்கள். ஆனால், போட்டியில் இல்லாதது போலவே மவுனமாக இருந்து காரியம் சாதித்து வருகிறார் ஒல்லி. ‘சூப்பர் ஸ்டார்’ மகளைத் திருமணம் செய்ததில் இருந்து இந்தத் திட்டம் தொடங்குகிறது. தற்போது அவரை வைத்து ஒரு படத்தைத் தயாரிப்பதில் நிற்கும் ஸ்கெட்ச், அவருடைய சின்ன வயது கேரக்டரில் நடிக்கும் திட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. அப்புறமென்ன? சின்ன சூப்பர் ஸ்டாராக அவரை ஏற்றுக் கொள்ளும் தமிழக மக்கள், அடுத்து அரசியலுக்கு அழைப்பார்கள்.
‘தேசிய விருது’ பெற்ற அந்த இயக்குநர், பெரியாரின் பெயரைக் கொண்டவர். சினிமாவுக்கு வந்த 10 வருடங்களில், 5 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார். அவை அனைத்துமே போற்ற வேண்டிய படங்கள்தான். நவரசத்தை நடிப்பில் வெளிப்படுத்தும் நாயகனை வைத்து ஒரு படத்தை எடுத்தார் இயக்குநர். அந்தப் படத்தை, பிரதர்ஸ் என்பதை நிறுவனத்தின் பெயராகக் கொண்ட இயக்குநர் தான் தயாரித்தார். ஆனால், அவர் தயாரிப்பில் உலக நாயகனும், பிரகாச நடிகரும் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஊத்திக்கொள்ள, இந்தப் படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஒன்றல்ல, இரண்டல்ல… மூன்று வருடங்களாக இந்த நிலை தொடர்கிறது. உலக நாயகனும், பிரகாச நடிகரும் உதவினால்தான் மீண்டெழ முடியும் என்ற நிலையில் இருக்கிறார் தயாரிப்பாளர். இதற்காக பஞ்சாயத்து பேசப்பட்டு, அவருக்கே பத்து கோடியை குறைத்துக் கொண்டு உலக நாயகன் கால்ஷீட் கொடுப்பது என்றும், அந்தப் படத்தை பச்சை நிறுவனம் தயாரிக்கும் என்றும் முடிவானது. ஆனால், கால் ஆபரேஷன் காரணமாக தன்னுடைய படத்தையே முடிக்க முடியாமல் தவித்துவரும் உலக நாயகன் எப்போது இந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்கப் போகிறார் என்பதுதான் கேள்விக்குறி
பழம்பெரும் நடிகையின் வாழ்க்கை வரலாறு, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில், மலையாள வாரிசு நடிகை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பழம்பெரும் நடிகையைப் போல கொஞ்சம் புஷ்டியாக இருந்ததால்தான் அந்த நடிகையை ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால், திடீரென சிலபல கிலோ வெயிட்டைக் குறைத்து சிக்கென ஆகிவிட்டாராம் நடிகை. இதைப் பார்த்து அதிர்ச்சியான இயக்குநரும், தயாரிப்பாளரும், கொஞ்சம் வெயிட் போடுமாறு நடிகையிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அப்படிச் செய்யமுடியாது என கண்டிஷனாக மறுத்துவிட்டாராம் நடிகை. பிரமாண்ட படத்தில் ஹீரோயின் எடையை கிராஃபிக்ஸ் மூலம் குறைத்துக் காட்டியது போல், தன் எடையை அதிகப்படுத்திக் காட்டுமாறு ஐடியாவும் சொன்னாராம்.
மெட்ராஸ் பட நடிகை, பிளேபாய் நடிகருடன் காடுகளை மையமாக கொண்ட படத்தில் நடித்தார். அப்போது, அப்படத்தின் சில காட்சிகள் வெளிநாடுகளில் உள்ள காடுகளில் படமாக்கப்பட்டது. அப்போது, நடிகையை தன் வலையில் வீழ்த்த பிளேபாய் நடிகர் முயன்றுள்ளார். ஆனால், நடிகரை ஏற்கனவே நடிகர் பற்றி தெரிந்த நடிகை, அவரை கிட்டவே நெருங்க விடவில்லையாம். இதனால் கோபமடைந்த அந்த நடிகர், உடம்பு சரியில்லை என காரணம் கூறி சில நாட்கள் படப்பிடிப்பிற்கு செல்லாமல் இழுத்தடித்தாராம். இதனால் குறித்த நாளில் வேறு படங்களுக்கு கொடுத்த கால்ஷீட்டில் நடிக்க செல்ல விடாமல், அவரை டென்ஷன் ஆக்கி ரசித்தாராம் பிளேபாய் நடிகர்...
நவரசங்களையும் தன் நடிப்பில் வெளிப்படுத்தும் நடிகர், பெரிய நம்பர் நடிகைக்கு கணவராக நடித்துள்ளாராம்.சைக்கோ கொலையாளியைக் கண்டுபிடிக்கும் சிபிஐ ஆபீஸராக ஒரு படத்தில் நடித்திருக்கிறார் பெரிய நம்பர் நடிகை. சைக்கோ கொலையாளியாக, பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல இயக்குநர் ஒருவர் நடித்துள்ளார். மேலும், நவரச நடிகரும் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோல் பண்ணியிருக்கிறார் என்றார்கள். உண்மையில், பெரிய நம்பர் நடிகைக்கு கணவராக நடித்துள்ளாராம் அவர். கதைப்படி, 4 வயது பெண் குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார் பெரிய நம்பர் நடிகை. பெரிய நம்பரும், நவரசமும் இணைந்து நடித்த ரவுடி படம் ஹிட் என்பதால், இதிலும் ஜோடியாக்கி படத்தின் பிசினஸைப் பெரிய அளவில் கொண்டுபோகப் பார்த்திருக்கிறார்கள்
பசுமை நிறுவனம் தொடங்கப்பட்டதே அண்ணன் தம்பி இரண்டு ஹீரோக்களுக்காகவும் தான். அவர்களது உறவினர் என்று சொல்லிக்கொண்ட ஒருவர் தொடங்கி நிர்வகித்து வந்தார். பின்னர் என்ன ஆயிற்றோ அண்ணன் நடிகர் தனியாக ஒரு நிறுவனம் தொடங்கினார். கணக்கு வழக்கு பிரச்னை என்று ஒரு தகவல் வந்தது. அண்ணனுக்கு வந்த கதைகளை தம்பி பக்கம் திருப்பி விட்டார் தயாரிப்பாளர். அதனால்தான் அண்ணன் தனி நிறுவனம் தொடங்கினார் என்றும் சொன்னார்கள். தம்பி நடிக்கும் படங்களை பசுமை நிறுவனம் தயாரித்து வந்தது. இப்போது என்ன ஆயிற்றோ தெரியவில்லை. தம்பியும் அந்த தயாரிப்பாளரைக் கழற்றி விட்டார். அண்ணனது நிறுவனத்தில் அடுத்து படம் நடிக்கப்போகிறாராம். அறிவிப்பு வந்துவிட்டது. தயாரிப்பாளர் இப்போது தனிமரமாகி விட்டார் என்கின்றனர்.
சென்னை: ரிப்பன் நடிகை டாக்டர் ஒருவரை காதலித்து வருகிறாராம். அண்டை மாநிலத்தில் இருந்து வந்த ரிப்பன் நடிகைக்கு தற்போது மார்க்கெட் இல்லை. பெரிய இடத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் வாரிசு நடிகை வந்ததால் ரிப்பனின் மார்க்கெட் அடியாகிவிட்டது.அவரும் மார்க்கெட்டை சரி செய்ய முயற்சி செய்தும் பலனில்லை. இந்நிலையில் நடிகை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகும் முடிவில் உள்ளாராம். நடிகை டாக்டர் ஒருவரை காதலிப்பதாக கூறப்படுகிறது. காதல் பற்றி கேட்டால் நடிகை பதில் அளிப்பது இல்லையாம். நடிகையின் கையில் புதுப்படம் எதுவும் இல்லை. நடித்தது வரை போதும் என்று செட்டிலாக முடிவு செய்துவிட்டார் நடிகை என்று விபரம் அறிந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.
காமெடியனாக இருந்தபோது கேரியர் கொஞ்சம் இறங்கவே சேஃப்டிக்காக ஹீரோவாக மாறினார். ஒன்றிரண்டு சுமார் படங்களையும் ஒரே ஒரு ஆவ்ரேஜ் ஹிட் படத்தையும் கொடுத்தவர் அடுத்த படத்தை கொடுக்க ஒரு வருடம் எடுத்துக்கொள்கிறார். விசாரித்தால் ஆறு மாதங்களுக்கு முன்பே தயாராகி பெட்டிக்குள் கிடக்கும் கிளாஸிக் பெயர் கொண்ட படத்தை ரிலீஸ் செய்வதில் நடிகருக்கு உடன்பாடு இல்லையாம். படம் சுமாராக வந்திருப்பதுதான் காரணம். இப்போது ரிலீஸ் செய்தால் அது அடுத்து வெளியாகும் தனது படத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் இழுக்கிறாராம். பாவம் தயாரிப்பாளர்!
கார்ப்ரேட் கம்பெனிகள் படம் எடுக்க வந்தால் இதுதான் நடக்கும்... என்று மூத்த படைப்பாளிகள் சீறிக்கொண்டிருக்கிறார்கள். அந்த கார்ப்பரேட் கம்பெனி தயாரித்து கடந்த வாரம் ரிலீஸான ஆடு படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. ஆனால் சென்னையைத் தாண்டினால் யாருக்கும் அந்த படம் ரிலீஸ் ஆனதே தெரியவில்லை.காரணம் அந்த நிறுவனம் புரமோஷன் விஷயத்தில் காட்டிய கஞ்சத்தனம். இதற்கு முன்னர் அந்த படம் வெளியிட்ட ரசிகர்களின் சண்டை பீரியட் படத்துக்கும் இதே கதி தான் ஏற்பட்டது. கார்ப்பரேட் கம்பெனி என்று நம்பிப்போனால் இப்படி பழி வாங்கிவிட்டார்களே என்று நொந்து போயிருக்கின்றனர் இரண்டு இயக்குநர்களும். இத்தனைக்கும் இரண்டு படங்களுமே சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டவைதான்!