ஓய்வு எடுத்துக் கொள்வது அம்மாக்கள் அறியாதது ! சாய்ந்து வீழும் வரை சக்கரமாய்ச் சுழல்வார்கள் ! தேய்பிறை ஆனாலும் அன்பின் ஒளி பொழிவார்கள் ! காய்ந்து போகும் வரை நமக்கிறைஞ்சி அழுவார்கள் ! வாய்ச்சுவை அழிந்து, சேய்ச்சுவைக் கைசேர்ந்துப், பாய்ந்து மார்முட்டிப் பாலைக் குடித்த பிள்ளைப் பேய் என்று வைதாலும் பேரன்பைத் தருவார்கள் ! சீய் என்று வதைத்தாலும் பசிக்குச் சோறிடுவார்கள் ! வேய்ந்த உறவுக்கூரை நிழலென்றும் குறைக்காமல், தோய்ந்த அன்புருவாய்த் தன்னலமில் தகைமையுடன், தாய் என்றவுறவு மட்டும் மண்ணுலகில் இல்லையெனில், நாய்ப் பிறவியும் கிடையாது, அவளின்றி உலகேது ? Regards, Pavithra
ங்கா என்று முதலில் பேச கற்று கொடுத்த ஆசான் அல்லவோ அன்னை .என்றும் உயர்வான உறவு அன்னை எனும் உறவு .பவித்ரா உயர்வான கவிதை
Thank you GG ! Thanks, Deepthi நன்றி லக்ஷ்மி ! சரியாகச் சொன்னீர்கள் பெரியம்மா ! உங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி !
Thank you for the appreciation, Madam ! உங்களது உணர்வுபூர்வமான இரசனைக்கும் பாராட்டிற்கும் நன்றி ! இக்கவிதையின் உந்துதலால் உங்கள் அம்மாவோடு பேசியதைப் பற்றி மகிழ்ச்சி ! As per your virtual name, stay blessed !