1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சந்தனத் தென்றல் - ஸ்ரீஜோ!

Discussion in 'Stories in Regional Languages' started by Sivasakthigopi, Apr 27, 2016.

  1. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Happy to know dear that you try to be active in IL. Hey thank you so much. Readers comments and feedbacks are the great motivating factor for the writers. Keep reading and post in your comments when ever possible.
     
    Sivasakthigopi likes this.
  2. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Thank you Sakthi. You are very sweet.
     
    Sivasakthigopi likes this.
  3. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    அத்தியாயம் - 11


    மறுநாள் காலை எழுந்த பார்த்திபன் மதியை காணாது எழ, அவளோ அபியை அணைத்து உறங்கிக்கொண்டு இருந்தாள்.

    அங்கு சென்றவன், அபியின் தலை கோதி, நெற்றியில் மெலிதாக முத்தமிட்டு, மதியிடம் சென்றான்.

    அவள் தலை கோதி, நெற்றியில் முத்தமிட்டவன் இருவரையும் கண்டு புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.

    நாட்கள் நகர தொடங்கியது. சின்னதுரை வேறொருவனின் மனைவியை நேசித்ததையும், அதுவும் அவளுக்கு ஒரு குழந்தை இருப்பதையும் அறிந்தவன், மனதளவில் வெறுத்து போனான்.

    அவன் உடல்நிலை தேற தொடங்கியதும் அவன் சென்னை நோக்கி பயணமானான். சின்னதுரையின் பெற்றோரும் மதியை கொல்ல ஆட்களை ஏற்பாடு செய்துவிட்டு, அவன் பின்னாலையே சென்னையை அடைந்தனர்.

    மாளிகை போன்ற வீடு, சுற்றிலும் வேலையாட்கள், வீட்டைச் சுற்றிலும் காவல். குழந்தையை கவனிப்பதை விடுத்து அவளுக்கு வேறு பணி இல்லை. பகலிலும் பார்த்திபன் இருக்கும் இடத்தை தவிர்த்தாள். இரவு அவன் வருவதற்கு முன்னே
    அபியும், அவளும் உறங்கிவிடுவார்கள்.

    கடந்த சில நாட்களாக பணியின் சுமையால், பார்த்திபன் மதியிடம் அதிகம் பேச முடியவில்லை.

    அன்று இரவு சீக்கிரம் திரும்பியவன், இருவரையும் தேட, மதி அபியை அவன் அறையில் சமாதனப்படுத்துவதைப் பார்த்தான். ஒரு எல்லைக்கு மேல் முடியாமல் போக மதி அபியை அடித்த அடுத்த நொடி, பார்த்திபனின் விரல்களின் அச்சு மதியின் கன்னத்தில் இருந்தது.

    அபியை தூக்கியவன், அவளை விரல் நீட்டி எச்சரித்துவிட்டு, குழந்தையுடன் வெளியேறினான்.

    கன்னத்தைப் பற்றிய மதி மெல்ல படுத்தாள். அபியை சமாதனம் செய்து, விளையாட்டு காண்பித்து, அவன் போனில் இருவரும் எடுத்த படங்களைப் பார்க்க வைத்து, அவனை உறங்க வைத்து உள்ளே தூக்கி வந்தவன், மதி குறுகி படுத்திருபப்தைப் பார்த்தான்.

    அபியை படுக்க வைத்தவன், மெல்ல அவளருகில் செல்ல, அவள் வயிற்றில் கை வைத்து உறங்கிக்கொண்டு இருந்தாள். சட்டென்று புரிந்தவனாக, தலையை கோதிவிட்டு, அவள் கன்னத்தில் இருந்த அவனது விரல் தடங்களை வருடியவன், மெல்ல அபியின் அருகில் படுத்து உறங்க ஆரம்பித்தான்.

    மறு நாள் காலை எழுந்த மதி, அவள் பாட்டில் இருக்க, அபி மதியின் பின்னால் சுற்றிக்கொண்டு இருந்தான். அவள் சோர்வாக தெரிந்தாள். அவனிடம் ஏதோ பேச முயலுவதைப் போல் உணர்ந்த பார்திபன், "டாக்டர வர சொல்லவா?"

    "இ.. இல்..ல. நா.. நான் நேரே கிளினிக்குதான் போகணும்" என மென்று முழுங்கி கூறினாள்.

    "கிளம்பு" என்றவன் அபியை அழைத்துக்கொண்டு கீழே சென்றான்.

    பரிசோதனை முடிந்து திரும்ப, அபி, "அப்பா. ஐக்கீம்"

    "ம்ம். போலாமே. வேற என்ன வேணும் என் செல்ல குட்டிக்கு?"

    "பிஸ்ட். வீட்ல நோ பிஸ்ட். நெய்யா வேணும். சாக்கி வேணும்" அவன் புரியாமல் யோசித்து விடை கண்டுபிடித்த அடுத்த நொடி கார் சட்டென்று ஓரம் கட்டி நின்றது.

    ஏதோ யோசனையில் உழன்று வந்த மதி, சட்டேன்று வண்டி நிற்க, திரும்பி பார்த்தாள்.

    "வீட்ல பையனுக்கு பிஸ்கட், சாக்லேட் இருக்கா இல்லையா?" என்ற குரலில் கோபம் பொங்கி வழிந்தது.

    அவனது பார்வையில் மிடறு விளங்கிய மதி, பயத்தில் வெளிறிய முகத்துடன் படபடக்கும் விழிகளுடன் மெல்ல அவனை நோக்கினாள்.

    "கேட்டது புரியலையா? காதுல விழலையா?"

    அவள் திணறிக்கொண்டே, கதவோடு நகர்ந்து அமர்ந்தவள் இல்லை என்பதாய் தலை அசைத்தாள்.

    அவனது கோபம், உச்சம் தொட்டது அவள் பதிலில், அதற்குள் அம்மாவின் முகத்தில் தெரிந்த பயத்தை உணர்ந்த அபி, வேகமாக எழுந்து அவள் கழுத்தை அணைத்து, நின்று கொண்டான்.

    இருவரும் அவனைப் பார்க்க, அபி, "அப்பா. அம்மா பாம். ஐக்காதிங்க" என்றதுதான் தாமதம், மதி குழந்தையை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட ஆரம்பித்தாள்.

    அவள் அழுவதைப் பார்த்த அபியும் அழ ஆரம்பிக்க, தன்னைத்தானே சமாதானம் செய்தவள், குழந்தையின் அழுகையையும் நிறுத்தினாள்.

    வண்டியில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குழந்தையின் முகம் கழுவியவள், தானும் கழுவிக்கொண்டாள்.

    சிறிது நேரம் கழித்து காரை எடுத்த பார்த்திபன் அதை ஒரு சூப்பர் மார்கெட்டின் முன் தான் நிறுத்தினான்.

    இறங்கி உள்ளே சென்ற பின் அவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதையை வைத்து தான், இது அவர்களுடையது என்று மதிக்கு தெரிந்தது.

    அவனது அறைக்கு அழைத்துச் சென்றவன் மகனை வாங்கி அவன் இருக்கையில் அமர வைத்து, மதியை எதிரில் இருந்த இருக்கையில் அமரச் சொன்னான்.

    "ரெண்டு பெரும் இங்கயே இருங்க. நான் போய் பிஸ்கட், சாக்லேட் எடுத்துட்டு வரேன்" என அவன் நகர தொடங்க,

    "ஒரு நிமிஷம்" என மதி தடுத்தாள்.

    என்ன என்பது போல ஒரு பார்வையை செலுத்தினான்.

    "அவனுக்கா எது பிடிக்குதோ அதான் சாப்பிடுவான். நீங்க வாங்கி தரத தொட கூட மாட்டான்"

    " ஹோ, சரி செல்லம். நீங்க வாங்க. நாம ரெண்டு பெரும் போயி வாங்கலாம்" என்று அவனை தூக்கிகொண்டு வெளியேறினான்.

    திடீர் நினைவு வந்தவனாக உள்ளே எட்டி பார்க்கவும், மதி தனக்குள் முனகிக்கொண்டே இருக்கவும் சரியாக இருந்தது. அதில் பார்த்திபனின் காதில் விழுந்தது, "அப்படியே அப்பாவுக்கு தப்பாம பிறந்துருக்கான். பிடிவாதம் வர வர அப்பா மாதிரியே ஜாஸ்தியாகுது."

    உள்ளே வந்தவன், "எழுந்து வா"

    அவன் திடீரென்று உள்ளே வந்து சொல்லியதில் தூக்கி போட எழுந்து நின்றாள் மதி.

    "நீயும் வா." என்றவன் வெளியேற அவனைப் பின் தொடர்ந்தாள்.

    பிஸ்கட் செக்சனில் பணியாள் டிராலியை தள்ள, அப்பாவும் மகனும் கண்ணில் பட்டதை எடுத்துக்கொண்டு இருந்தனர். மதி தனியாக அவளுக்கு தேவையானதை எடுக்கச் சென்றாள். வேண்டியதை எடுத்துக்கொண்டு மற்றதை பார்வையிட்டுக்கொண்டே வந்தவள், அங்கிருந்த பெண் குழந்தை ஒன்று கீழே விழுந்து விட, அதைக் கண்டு அதனிடம் ஓடியவள், மெல்ல தூக்கிவிட்டாள். "அச்சுச்சோ பாப்பாக்கு அடிபட்டுடுச்சா?"

    "இம்ம்ஹ்ம்" என்று அது சிணுங்கி அதன் அன்னையிடம் ஓடியது. அதைப் பார்த்து மெல்ல சிரித்த மதி, எழுந்து நிற்கவும், பார்த்திபன் அவளின் முன் கோபமாக வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

    பதிலேதும் பேசாமல், அவள் டிராலியை பார்க்கவும், அவன் "வா போலாம்" என்று கூறிக்கொண்டே பணியாளை விட்டு பில் போட அனுப்பி வைத்து நடக்க அவள் பின்னே நடந்தாள், "ஓர் நிமிஷம்" என்று கூற அங்கிருந்த சத்தத்தில் அவன் காதில் விழவே இல்லை.

    உடல் சோர்வில் அவள் மெதுவாக நடக்க பார்த்திபன் எப்போதும் போல் மகனுடன் நடக்க அவள்மறுபடியும் அழைத்தது அவன் காதில் விழவில்லை.

    வேறு வழியின்றி, "தீபன் மாமா" என்று சத்தமாக அழைக்க, சட்டேன்று நின்ற பார்த்திபன் திரும்பி பார்த்தான்.

    அவனிடம் வந்து நின்றவள்,"என.. எ.. எனக்கு இன்னும் கொஞ்சம் வாங்கணும்." என சொல்ல, "சீக்கிரம் வாங்கு" என்றவன் அவளைப் பின் தொடர்ந்தான்.

    பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தவளை தொடர்ந்தவனை, "ஒரு நிமிஷம் இங்கயே இருங்க." என்று நின்று கூறினாள்.

    "ஏன்" என்று அவன் கோபமாக கேட்க, அவள் செல்ல வேண்டிய பகுதியை காட்டி, "அங்க போகணும்" என்றாள்.

    "போ. நாங்களும் வரோம்"

    அவனது பதிலில் எரிச்சல் அடைந்தவள், "அங்க நிறைய லேடீஸ் இருக்காங்க"

    "சோ வாட்?"

    "ப்ச். நாம போனா போகலாம், அங்க இருக்கறவங்க சங்கடப்பட சான்ஸ் அதிகம் இருக்கு. இருங்கன்னா இருங்களேன்" என அவள் மெதுவாகவும் கடுப்பாகவும் சொன்னாள்.

    அவன் அவள் பேசுவதை ரசித்துக்கொண்டே அங்கேயே நின்று கொண்டான்.

    ஒரு வழியாக முடித்து, மதிய உணவையும், அவர்கள் ஹோட்டலில் முடித்து, சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்து, அருகில் இருந்த பார்க்கில் மகனை விளையாட வைத்து இரவு உணவையும் முடித்து வீடு திரும்பினர்.

    மதி குளித்து நைட்டி மாற்றி வர, பார்த்திபன் மகனது உடையை மாற்றி அவனை உறங்கச் செய்து இருந்தான்.

    அவள் படுக்கச் செல்ல, அவளை தடுத்தவன் அவளை இறுக அணைத்தான். அவனது இதயத்துடிப்பு வெகு அருகில் கேட்க, மதி தடுமாற ஆரம்பித்தாள். அவளது படபடப்பும், துடிக்கும் இதயமும் பார்த்திபனின் கவனத்தை அவளிடம் திருப்ப, மெல்ல அவள் நெற்றியில் முத்தமிட்டான். அதில் அவள் கண்கள் மூடிக்கொள்ள, அதில் அலைபாயும் விழிகள் அவனை ஈர்த்தன. அவள் மூடிய இமைகளின் மேல் முத்தமிட அவளது இதழ்கள் துடிக்க ஆரம்பித்தன. அதில் லயித்தவன், மெல்ல அவள் இதழ்களை சிறை செய்தான்.

    நிமிடங்கள் நீடித்த அந்த மோன நிலையில் இருந்து பார்த்திபன் தான் முதலில் தன்னை மீட்டான்.

    அவளை விடுவித்தவன், மெல்ல அவள் முகத்தை வருடினான். அவள் கண்ணீர் அவன் விரல்களை தொட, சட்டேன்று கையை அவள் முகத்தில் இருந்து எடுத்தவன், உடல் இறுக, அவளை கட்டிலில் தள்ளிவிட்டு, "இன்னிக்கு உனக்கு உடம்பு சரியில்லைன்னு போறேன். உனக்கு நான் தந்த டைம் முடிஞ்சு போச்சு. இனி நீ அங்க படுக்கற என்று அவன் அறையைச் சுட்டியவன், அவனறைக்குள் நுழைந்தான்.


    -- தென்றல் வீசும்.

    Copy Right to Shrijo
     
  4. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    sweetnu ice vaikaringale priya?
     
    sreeram likes this.
  5. aarthi28

    aarthi28 Platinum IL'ite

    Messages:
    1,121
    Likes Received:
    1,463
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Eagerly Awaiting for next part....
    Supera erukunga ...
    I like the character Paarthiban and may be Mathi is not understanding him..
     
  6. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    Intha "nga"va vittudungalen pa!
    yellarum villan nu sollra character ungaluku pidichchurukke!":blush::blush::blush:
     
  7. aarthi28

    aarthi28 Platinum IL'ite

    Messages:
    1,121
    Likes Received:
    1,463
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Elainga.. I really like that character.
    Naan nenaikaren, avaru murattu thanam mathiku pidikama erukalam , elaina avaroda backgroundukku avaru vera kalyanam panni erukalam ella.
    Kobam erukara edathil thaan gunam erukkum.
     
    Sivasakthigopi likes this.
  8. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    marupadiyum "nga" va!
    let we see what is behind?
     
  9. aarthi28

    aarthi28 Platinum IL'ite

    Messages:
    1,121
    Likes Received:
    1,463
    Trophy Points:
    290
    Gender:
    Female
    N
    NGA means what
     
  10. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    "ங்க" என்று ரொம்ப மரியாதை தரீங்களே அதை சொன்னேன் பா!:blush::blush::blush::blush:
     

Share This Page