இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது பாடல் மெட்டு. ------ பல்லவி உன்னைப் போலே பெண்ணும் இங்கில்லையே உன்னைப் பார்த்திட கண்கள் நூறில்லையே என்றும் அழகுக்கு நீதான் இங்கெல்லையே அனுபல்லவி என் கவிதையுன் கண்ணுக்கு ஈடாகுமோ உன்னைக் கண்டதும் ஹார்ட்பீட் ஸ்பீடாகுமோ இன்னும் குருதியும் எத்தனைச் சூடாகுமோ உன்னைப் போலே பெண்ணும் இங்கில்லையே சரணம் 1 மன்மதன் வாழும் கோவிலின் கலசம் மனதினை கொள்ளை கொள்ளும் மலரிதழ் கண்டால் கவிஞனின் நெஞ்சம் தேனுண்ட வண்டெனத் துள்ளும் வண்ணத் தூரிகையால் உன்னை வரைந்தானோ உன்னைப் போலே பெண்ணும் இங்கில்லையே உன்னைப் பார்த்திட கண்கள் நூறில்லையே என்றும் அழகுக்கு நீதான் இங்கெல்லையே உன்னைப் போலே பெண்ணும் இங்கில்லையே சரணம் 2 காதலி உந்தன் பெயரைச் சொல்லிட நாவினில் அமுதம் ஊறும் நீவந்து சென்ற இடங்களில் எல்லாம் இரதியின் வாசம் வீசும் என்னைக் கொல்லவென்றே உன்னைப் படைத்தானோ உன்னைப் போலே பெண்ணும் இங்கில்லையே உன்னைப் பார்த்திட கண்கள் நூறில்லையே என்றும் அழகுக்கு நீதான் இங்கெல்லையே உன்னைப் போலே பெண்ணும் இங்கில்லையே சரணம் 3 உன்னுடன் சேர்ந்து நானிந்த உலகில் என்றென்றும் வாழ்ந்திட வேண்டும் உன்னுயிர் பிரியும் வேளைக்கு முன்னே என்னுயிர் பிரிந்திட வேண்டும் அந்தக் காதலுமே நம்மை வாழ்த்திடுமே உன்னைப் போலே பெண்ணும் இங்கில்லையே உன்னைப் பார்த்திட கண்கள் நூறில்லையே என்றும் அழகுக்கு நீதான் இங்கெல்லையே உன்னைப் போலே பெண்ணும் இங்கில்லையே இங்கில்லையே உன்னைப் பார்த்திட கண்கள் நூறில்லையே என்றும் அழகுக்கு நீதான் இங்கெல்லையே