1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

72-கிருஷ்ணலீலா-ராத மாதவ்.

Discussion in 'Regional Poetry' started by deepa04, Nov 22, 2011.

  1. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    72-கிருஷ்ணலீலா-ராத மாதவ்.

    அன்புடன் தன அகத்துக்கு அழைத்து வந்த ராதையை கண்ணனின்
    அன்னையவள் பாங்குடன் அலங்கரித்து சீவி முடிந்து சீராட்டி,
    நெட்டி முறித்து வழியனுப்பி வைத்தால்,மனமின்றி பிரிந்தணல் நங்கை.

    கண்ணனிடம் மனம் பறிகொடுத்து,என்றுமில்லா சோபையுடன்
    காண்பவர் கண்கொள்ளா அழகுடன் வெண்புறாவின் நிறமுடைய
    ராதையவள் அந்திவான நிறத்தை தன் கன்னங்களில் ஏந்திக்கொண்டு,

    கண்களில் ஏக்கம் மிக்கவளாய் உதடுகள் அவன் நாமமதை உருபோட,
    மங்கையவள் ஒரு மார்க்கமாய் வந்துது கண்ட பெற்றவர் யோசனையுற.
    பளிங்கினை ஒத்த பிறை நெற்றியில் மிளிர்ந்த ஸெந்தூரம்,கரு நாகமென

    நீண்ட பின்னலின் இடையினில் அழகிய நல் முத்துகளை கொண்ட பதக்கம்,
    வண்ண வண்ண மலர்களை கோர்த்து பின்னலில் சூடிய நேர்த்தி இவற்றுடன்
    சரிகைகள் மிகுந்த வண்ணப் பட்டு வஸ்திரம் என ஓவிய பாவையாம் ராதையை.

    ஏறெடுத்து நோக்கிய பெற்றவள் உள்ளமதில் அழகிய இப்பெண் என் மகள் என்ற
    பெருமை பொங்க,சுந்தர வதனம் கொண்ட என் மகவுக்கு மேலும் சிங்கரித்த
    பெண்மை எது,அன்பு பொங்கும் தாய்மை உள்ளத்தின் முகவரி எது என வினவ.

    நந்தரின் மனையாள் அன்புமிக்க யசோதா மாதா எனை ஆசையுடன் அழைத்தால்,
    எனை நானவிதமாய் பாங்குடன் அலங்கரித்து,உச்சி மோந்தாள்,பின்னர் அன்புடன்
    எனை ஒரு கண் நோக்கி,தன் பிள்ளை கண்ணனையும் நோக்கி,சூரியனை நோக்கி

    கண் மூடி தன் மனதினுள் எதோ பிரார்த்தனை செய்பவள் போல் கைகூப்பி தொழுதால்
    நீ யாருடைய பெண்ணென்றும்,நின் பெற்றவர்,உற்றவர் யாரென கேட்டால் யசோதை,
    என நந்தரின் அரண்மனை சென்று வந்த நங்கை நடந்ததை விவரிக்க,வ்ரஷபானு

    என்ற பெயர் கொண்ட ராதையை பெற்றெடுத்த புண்ணியவான் ஆசையுடன்
    மீண்டும்,மீண்டும் மகளை சொல்ல சொல்லி மகிழ்ந்தான்,ஆயர்குலம் காக்க
    அவதரித்த நந்தன் மகனுக்கு பெண் கொடுக்க என்ன தவம் செய்தல் வேண்டும்

    தலைவனாய் இருப்பவரின் மருமகளாய் தன் மகள் ஆவாள் எனின் பெற்ற மனம்
    மகிழ்ந்து மனதார பெருமைப்படும் அதே நிலையில் இன்று ராதையின் தந்தை.
    பிரியம் வைத்தவன் எதிர்ப்பின்றி கிடைப்பான் துள்ளியது ராதையின் மனம்.
     

    Attached Files:

    1 person likes this.
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    தீபா..ரசித்து படித்தேன்..விட்ட மற்ற லீலைகளையும் சீக்கிரமே படிக்கிறேன்..

    Sriniketan
     
  3. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    thanks sri.
     

Share This Page