வித்தியாசங்கிறான்… மாறுபட்ட படங்கிறான்… இது திரையுலக புரட்சிங்கிறான்… எட்டு மணி நேரம் மேக்-அப் போட்டேங்கிறான் எட்டுக்கால் பூச்சி கடிச்சதையும் தாங்கிகிட்டேங்கிறான்… - படத்தக் கதை கேட்டுப்புட்டு நடிகை காசு வாங்காமலேயே நடிச்சுப்புட்டு நாலுநாள் அழுதாங்கிறான் - அந்தப் பெரிய நடிகர் ரஷ் பார்த்துப்புட்டு மூணுநாள் பிரஷ் பண்ணலைங்கறான்! சான்ஸே இல்லை சர்வதேச சினிமாவுக்கு சவால்னு சிலுப்பறான் - நம்பி நம்பி உட்கார்ந்தே நாசமாப் போனவன்தான்டா தமிழன் எவ்வளவுதான் இப்படி பில்டு-அப் பண்ணுவீங்க? - ஸ்பானிஷ் சரக்கை பாதி உருவி இந்தி சால்னாவை இஷ்டத்திற்கு கலந்து குடியாத்தம் குத்தாட்டத்தை குறுக்கே சேர்த்து பிச்சைக்காரன் பித்தளை தட்டு சோறு போல கலந்து கட்டியா வைச்சுப்புட்டு - மோவாயில கை வைச்சு மோட்டு வளைய பார்த்துகிட்டு பதேர் பாஞ்சாலி, எலிபத்தாயம் கணக்கா எட்டு வாரம் ஒன்பது சேனல்ல பில்டு – அப் கொடுக்கறத எப்போ நிறுத்தப் போறீங்க? - நல்ல விதமா படம் எடுத்தா நாயர் கடையில் நாலு அவுன்ஸ் டீ குடிக்கிறவனுக்கும் தகவல் தானா போயுடும்டா… புரிஞ்சுக்கடா… கோடம்பாக்கத்து ஜீன்ஸ் தம்பி! ============================================== - கவிஞர் காத்துவாயன் நன்றி: குமுதம்