வரிசையாக சென்றது எறும்பு கூட்டம் அதை பார்த்து சிரித்தது கருவண்டு வண்டின் சிரிப்பால் கோபமுற்ற குழந்தை எறும்பு நாம் மட்டும் ஏன் வரிசையாக செல்ல வேண்டும் வண்டை போல் தனியாக போகலாமே என தாயிடம் கேட்க சற்று பொறுத்திருந்து பார் என்றது தாய் எறும்பு எறும்பை கண்ட மனிதன் ஒதுங்கி சென்றான் வண்டை கண்ட மனிதன் அதை அடித்து கொன்றான் அதிர்ச்சி அடைந்த குழந்தையிடம் சொன்னாள் தாய் நீ கூட்டமாக சென்றால் உன்னை கண்டு பயம் கொள்வர் தனியே சென்றால் உன்னை நசுக்கி விடுவர்
கவிதையில் அழகாய் உண்மை உணர்த்தும் கதை கூறி என்றும் ஒற்றுமையே வலிமை தரும் என்று உணர்த்தி விட்டீர்கள் கவிதை அருமை அம்மா :thumbsup