எங்க புள்ள நீயிருக்க என் பாதியாக போறவளே!!!!! கண்ணுக்கு முன்னால பொண்ணுக நூறு, கண்டுங்காணாம ஆம்பிள நானும் கன்னிப் பொண்ணுங்கள தாண்டி எத்தினி நாள் போவேன்.... எங்கிருந்தாலும் வந்துடு ரோசா.... ராசா நா உன்ன மஞ்ச கயித்தால ஒருதரம் கட்டுறேன்... கோச்சுக்காம நீயும் என்ன கட்டிப்போடு மனசுல நம்ம ஆயிசு பூரா.........
இன்னொரு விக்கட்டும் விழுந்திடுச்சா? இந்த காதல் டெஸ்டல பேட்ஸ்மேனும், பௌளரும் - இருவருக்குமே வெற்றிதான். அம்பயரும், தேர்ட் அமபயருமான பெற்றோர்களுக்குத்தான், சோதனை - வாழ்கை மாட்சில் இவர்கள் ஜெயிப்பார்கலாவென.... ரோசாவும் ராசாவும் அருமை ப்ரியா.
DP, Sema kalakkal raasaa va irukkaaga...thumbsup ரோசா வின் எசப்பாட்டு: காய்ந்த சிரகா கிடக்கேன் தாலிய கட்டி தீயக் கொளுத்தி போடு ராசா!!
திரும்பாம போனவள பேர் சொல்லி பொரும வச்ச என் செவத்த ராசா கன்னி பொண்ணுங்க பார்க்கையிலே நீ கண்ணுக்கு கடிவாளம் போட்டுடு ராசா நானுந்தேன் பார்கிறேன் நூறு வீரன முழுசா பார்க்கையிலே நீ தானே தெரியிற ராசா எத்தன கலர் இங்க இருந்தாலும் நீ கொடுக்கும் மஞ்ச கலர் என் மனசுக்கு மத்தாப்பு ராசா வேண்டான்னா சொல்லிடுவேன் நீ வேகமா கொடுக்கையிலே தந்திடு ராசா தாலியத்தான் ஒரு தரம் தாரமா நா இருப்பேன் தவறாம ஓங் கூட.
ஏ,புள்ள பாத்தியா, அங்கன ஒருகிருக்கேன் புலம்பிகிட்டு கிடைக்கறதே. அவம்பாட்டுக்கு,கத்திகிட்டே கெடக்கட்டும் உடு, ஒன்னும் ஆகாது,அது எங்கனே எப்பிடி சுத்தினாலும், இங்கனே தானே விழனும்,அப்பா பாத்துக்கிடலாம். பதில் குரல் இப்படித்தான் கேட்டது,தேவா!
ரோசாவத் தேடி இந்த ராசாவின் மனசுல வந்த பாட்டுக்கும் எசப் பாட்டு நான் படிக்க, ஆசைதான். மொதவே நெறைய பேர் படிச்சதாலே இந்தப் பாட்டு ரொம்ப அழகா இருந்தது அப்டீன்னு மட்டும் நான் சொல்லிகறேன்.
paavam Priya antha paiyana ninaicha ipove alugai alugai ya varudhu.. :rotfl nalla sollirukka :thumbsup antha ponnoda bathil Saroj Super a sollitaanga.. irunthaalum naanum solla try panren என்னை பாதியாய் சொன்னவனே என்னில் முழுசாய்த்தான் ஆனவனே ஆடி தான் போகட்டும் ஆவணி தான் பிறக்கட்டும் மாமா நீயும் என்னை கட்ட.. என்னைகட்டும் நாளு வரைக்கும் நீயும் கொஞ்சம் கண்ணைக் கட்டு என்னை பார்த்த உன் கண்ணு மத்தப் பொண்ணையும் பார்த்தாலே வெறும் பொண்ணாத்தான் பார்த்த என்னை பேயாத் தான் பார்த்திடுவ..
thank you nats... neenga eppavume ippadi thaana nats.... naan soldravangala thavira matha ellara pathiyum kavalapadureenga...