நீ பாதி நான் பாதி என்னில் சரி பாதி என நீ சொல்ல, சரியென நினைத்தேன், மகிழ்ந்திருந்தேன், இன்றல்லவா விளங்கியது உயிர் நீயென்று, உடல் நானென்று, நீ விலக, வெறும் உடலுடன் வெறுமை சூழ வெறித்திருக்கையில், இருக்கையில் வெறுத்து இருக்கையில், உடன் நீ இல்லாது இருக்கையில்.
ரொம்ப நல்ல இருக்கு.. :thumbsup உயிரை ஊற்றி வளர்த்தாலும் உணர்வை போற்றி வளர்த்தாலும் விட்டு போகையிலே தடுமாறித்தான் போகின்றேன்.. நான் உன் உணர்வாக நீ என் உயிராக.. இன்று நீ என்னை நீங்கிய பின் உயிரும் அற்று உணர்வுமற்று கிடக்கும் எனக்கு பெயர் என்ன???
தவமிருந்து போற்றிய பாதி, பாதி வழியே போகையிலே, பாவி மக உணர்வற்று, உயிரற்று, உலாத்தும் சவமென சொல்லாமல், சொல்லி விட்டீர்கள் ரம்யா - அருமை.
உன்னில் சரி பாதி எனில் உடலிலும் சரி, உயிரிலும் சரி இரண்டிலும் சரி பாதிதான் சரி உயிரும், மெய்யும் சேர்த்து மெய்யாய் உயிர் கொண்டு உங்கள் மைவிழியாளுடன் வாழ வாழ்த்துக்கள். இதிலும் சரி பாதி உங்கள் அவர்களுக்கு ... சரிதானே???
அற்புதமாய் கவிதை இருக்கையிலே, ஐயம் வந்தது அப்போதே??? அப்போ, என் கற்பனை வீணாப் போச்சே?? (Read it in Mr.Vadivelu's "Vadai veenaap pochche" style) :bonk:bonk
தானொரு பாதி தனை ஆண்டவள் மீதி தந்ததொரு நீதி நீ நீயாய் இரு. வெளிச்சத்தில் தொலைத்ததை இருளில் தேடாதே நண்பரே!!!! நீ பாதி நான் பாதி உள்ளே வெளியே மாதிரி.