வீசும் தென்றலிடம் கேட்டேன் என்னிடம் இல்லை என்றது; ஓடும் மேகத்திடம் கேட்டேன் தனக்கு தெரியாது என்றது; கூவும் குயிலிடம் கேட்டேன் நான் அறியேன் என்றது; குடையும் வண்டிடம் கேட்டேன் தன்னிடம் இல்லை என்றது; நதியிடம் கேட்டேன் நான் எடுத்துச்செல்லவில்லை என்றது; கடலிடம் கேட்டேன் என்னிடம் வரவில்லை என்றது; குப்பையிடம் கேட்டேன் நான் கண்டால் உன்னிடம் தருகிறேன் என்றது; எங்கு எறிந்தாய் அன்பே என் இதயத்தை? உன் மனதிடம் கேட்டு பார் ஒருவேளை....... அங்கேயே இருந்தாலும் இருக்கலாம்!
எறியும் பொருளா உன் இதயம்?? எரியும் காதல் அதில் உதயம்... இனிமையாய் எனக்கு இதம் சொல்லும் உன் இதயம் அதன் அன்பு உன்னதம் தேட வேண்டாம் அதை.... என்னிடம் அது பத்திரம் அங்கே நீ, நான் மாட்டி வைத்த சித்திரம்
Eppadi veni, endha oru matter ah irunthalum, ungalala ippadi kavidhaiyileye reply panna mudiyuthu? its really amazing yar!! (veettile amma or MIL or any other elders iruntha ungalukku suthi poda sollunga veni.. enn kanne pattudum pola irukku)
Hey AG, Achacho ennaale mudiyalaiye..........:drowning:drowning:drowning:drowning Un kavithaigal appadi maa, naan enna seiya??? Athai padicha enakku ippadi reply pannath thonuthu. So intha credit ellaame unakkuthaan maa. :thumbsup
மனமிருந்தும், மனமில்லாமல், உன் இதயம் தொலைத்த, காரணத்தால் தானே அவன், தொலைக்காவிடினும் உன்னை விட்டு, தொலைதூரம் போனானே, தொல்லையாய் ஆனானே, அழகு கவிதை எழுத வைத்தானே, கவிதை கண்டு உனை, மீண்டும் கண்டு கொள்வானே, காதெலெனும் கீதம் பாட பறந்து வருவானே.... Kgp - கவிதை அருமை.
I am not only telling about my kavithais.. But ellathukkume appadi thene unga badhil irukku...99.9% of the threads will have your poetic reply.. no one deny that.. that makes me wonder on you..you are really rocking my friend!
உன் கவிதையின் வெள்ளத்திலே என்னால் கரையேற முடியவில்லை இதில் உன் அன்பு வெள்ளம் வேறு எனை வெல்லப் பாகிலே திளைக்கும் எறும்பாய் உருக்கி கரும்பாய் இனிக்கச் செய்து, உளம் கசியச் செய்கிறது அன்பிலே உங்கள் அன்புக்கு நன்றி. ஆனந்தம் தந்த என் ஆனந்தியே, நீ என்றும் வாடாத செவ்வந்தியே.. என் நெஞ்சில்
உங்கள் இருவரின் வரிகளுக்கிடையே நான் எங்கே போவது எங்கே தொடங்கி எங்கே முடிப்பது எங்கே என்று கேட்ட கேள்விக்கும் எங்கே நான் பதில் கொடுப்பது கொடுக்க வேண்டிய வாத்தைகள் ஒன்றும் இங்கே இருப்பில் இல்லை எல்லாம் அவள் பொறுப்பில். பொருக்கி எடுத்து பொறுப்பாய் ஒரு பதில் சொல்கிறேன் இயற்கையாய் தொலைந்ததை இயற்கையில் தேடும் என் பேதையே இருப்பதை எல்லாம் துடைத்து விடு துலங்கிடும் நீ தொலைத்தது மாசறு பொன்னாய் மன மகுடத்தில் ஒன்றாய்.....