காற்றின் கான ஓலி வந்து என் காதில் ஒலிக்கும் போதெல்லாம் உனது நாதம் வேண்டி நிற்கிறது என் செவிகள்!! பௌர்ணமி நிலவு என்னை ஜன்னல் வழி எட்டிப்பார்க்கும் போதெல்லாம் உனது பார்வை வேண்டி தவிக்கிறது என் கண்கள்!! தூக்கணாங்குருவி கூட்டில் கொஞ்சி நிற்கும் பறவை மொழி காணும் போதெல்லாம் உனது காதல் வேண்டி துடிக்கிறது என் இதயம் !!
உன் செவிகள், விழிகள், இதயம் எல்லாம் என்ன வேண்டினவோ தெரியவில்லை, ஆனால் நான் வேண்டுவது இதே போலே உங்கள் கவிதைகள் நிறைய. வெகு அழகான கவிதை.
அழகான வரிகள்.... படிக்க படிக்க ஒரு விதமான முழுமையான காதல் மனதில் ஒவொவொரு தரம் குடி ஏறுவதை உணர முடிகிறது.... அழகான கவிதை