1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அன்றொரு நாள் இதே நிலவில்
    திரைப்படம்: நாடோடி
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா


    அன்றொரு நாள் இதே நிலவில்
    அவர் இருந்தார் அவர் இருந்தார்
    என் அருகே
    அன்றொரு நாள் இதே நிலவில்
    அவர் இருந்தார் என் அருகே
    அன்றொரு நாள் இதே நிலவில்
    அவர் இருந்தார் என் அருகே
    நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
    நீ அறிவாயே வெண்ணிலவே

    அந்த ஒரு நாள் ஆனந்தத் திருனாள்
    இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ?
    பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
    பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
    பாவை மேனியிலே
    நீ பார்த்தாயே வென்ணிலவே

    அன்றொரு நாள் இதே நிலவில்
    அவள் இருந்தாள் என் அருகே நான்
    அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
    நீ அறிவாயே வென்ணிலவே

    வானும் நதியும் மாறாமல் இருந்தால்
    நானும் அவளும் நீங்க்காமல் இருப்போம்
    சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
    சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
    காதல் மேடையிலே நீ
    சாட்சியடி வென்ணிலவே

    அன்றொரு நாள் இதே நிலவில்
    அவர் இருந்தார் என் அருகே நான்
    அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
    நீ அறிவாயே வென்ணிலவே

    ஆடும் கனியை ஆடாமல் ஏடுத்தான்
    வாடும் மலரை வாடாமல் தொடுத்தான்
    ஆடும் கனியை ஆடாமல் ஏடுத்தான்
    வாடும் மலரை வாடாமல் தொடுத்தான்
    சூடிக் கொடுத்தான் பாடி முடித்தான்
    பாவை மேனியிலே நீ
    பார்த்தாயே வென்ணிலவே
    ஆஆஆஆஆஆ

    அன்றொரு நாள் இதே நிலவில்
    அவர் இருந்தார் என் அருகே
    நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
    நீ அறிவாயே வென்ணிலவே
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்

    படம்
    - ஆண்டவன் கட்டளை
    இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    பாடியவர்கள் - டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா

    டி.எம்.எஸ்
    அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
    காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
    காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
    கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
    அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

    டி.எம்.எஸ்
    தென்fனம் இளங்கீற்றினிலே ஏ..ஏ..ஏ
    தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
    தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
    தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
    தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
    அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

    பி.எஸ்.
    ஓ ஓ ஓ
    ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
    ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
    காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை
    காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை
    அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

    பி.எஸ்
    நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
    நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
    நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
    நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
    அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

    டி.எம்.எஸ்
    அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தௌiந்துவிடும்
    அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தௌiந்துவிடும்
    அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
    அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்

    (இருவரும்)
    அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
    காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
    காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
    கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
    அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
     
  3. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    மற்றொரு கீதம்

    காற்றினிலே வரும் கீதம்
    படம் : மீரா
    இசை : S V Venkataraman
    பாடல் : கல்கி
    பாடியவர் : M S சுப்புலட்சுமி
    வருடம் : 1945

    காற்றினிலே வரும் கீதம்
    கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
    கல்லும் கனியும் கீதம்
    காற்றினிலே வரும் கீதம்

    பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
    பண்ணொளி பொங்கிடும் கீதம்
    காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
    மதுர மோகன கீதம்
    நெஞ்சினிலே-
    நெஞ்சினில் இன்ப கனலை எழுப்பி
    நினைவழிக்கும் கீதம் (காற்றினிலே)

    சுனை வண்டுடன் சோலைக்குயிலும்
    மனம் குவிந்திடவும்
    வானவெளிதனில் தார கணங்கள்
    தயங்கி நின்றிடவும்
    ஆஹ, என் சொல்வேன் மாயப்பிள்ளை
    வேய்ங்குழல் பொழி கீதம் (காற்றினிலே)


    நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
    உலாவிடும் நதியில் -
    நீல நிறத்து பாலகன் ஒருவன்
    குழல் ஊதி நின்றான்
    காலமெல்லாம் -
    காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
    உருகுமோ என் உள்ளம் (காற்றினிலே)

    படிக்க மட்டும் இல்லை செவிக்கும் அமுதூட்டும் பாடல் இதோ

    YouTube - kaaTRinilE varum geetam

     
    Last edited: Jun 21, 2010
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஆஹா!!!!!!!!
    சுப்புலட்சுமி அம்மையின் எத்தனை அற்புதமான பாடல்
    நன்றி உங்கள் பகிர்வுக்கு

    பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
    படம்: படித்தால் மட்டும் போதுமா
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பாடியவர்கள்: Pb ஸ்ரீநிவாஸ், tm சௌந்தர்ராஜன்
    வரிகள்: கண்ணதாசன்

    பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
    என்னென்று நான் சொல்லலாகுமா
    என்னென்று நான் சொல்லவேண்டுமா

    பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
    ஏன் என்று நான் சொல்லலாகுமா
    ஏன் என்று நான் சொல்லவேண்டுமா

    நடமாடும் மேகம் நவநாகரீகம்
    அலங்கார கின்னம் அலை போல மின்னும்
    நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
    பழங்கால சின்னம் உயிராக மின்னும்
    துள்ளி வரும் வெள்ளி நிலா
    துள்ளி வரும் வெள்ளி நிலா
    துவண்டு விழும் கொடியிடையாள்
    துவண்டு விழும் கொடியிடையாள்
    விண்ணோடு விளையாடும்
    பெண் அந்த பெண்ணல்லவோ
    சென்றேன் அங்கே
    கண்டேன் இங்கே
    வந்தேன்

    பெண் ஒன்று கண்டேன் பொன் அங்கு இல்லை
    என்னென்று நான் சொல்லலாகுமா
    என்னென்று நான் சொல்லவேண்டுமா

    நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை
    நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
    நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை

    உன் பார்வை போலே என் பார்வை இல்லை
    நான் கண்ட காட்சி நீ காணவில்லை
    நான் கண்ட காட்சி நீ காணவில்லை

    என் விழியில் நீ இருந்தாய்
    என் விழியில் நீ இருந்தாய்
    உன் வடிவில் நான் இருந்தேன்
    உன் வடிவில் நான் இருந்தேன்

    நீ இன்றி நானில்லை
    நான் இன்றி நீயில்லையே
    சென்றேன் ம்ஹிம்
    கண்டேன் ம்ஹிம்
    வந்தேன்

    பொன் ஒன்று கண்டேன்
    பெண் அங்கு இல்லை
    என்னென்று நான் சொல்லலாகுமா
    என்னென்று நான் சொல்லவேண்டுமா

    பூ ஒன்று கண்டேன்
    முகம் காணவில்லை
    ஏன் என்று நான் சொல்லலாகுமா
    ஏன் என்று நான் சொல்லவேண்டுமா

     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Anbulla rojavae!

    azhagaana thuvakkam!:thumbsup paadal varigal adhuvum manadhirkiniya andha kaala geethangal!:coffee

    arumai thozhi!:cheers

    amudhai pozhiyum nilavae matrum paadaadha paattaellam ivai irandumae enakku migavum pidiththavai!:bowdown

    M.G.R avargalin paadal ondru sariyaai ninaivillai aanaal mangayai nilavaai varniththirupaar adhuvum enakku kaetkka uyir!:thumbsup
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    அருமையான முயற்சி தோழி....

    பழைய பாடல்களின் இனிமையை இப்போதுள்ள பாடல்களில் நாம் தேடினாலும் பெற முடியாது...
    இங்கு இருக்கும் ஒவ்வொரு பாடல்களையும் எதனை முறை கேட்டாலும் அதனை முறையும் இனிமை கூடுமே தவிர குறையவே குறையாது.....

    எனக்காக ஒரு பாடல்...நெஞ்சில் ஊர் ஆலயம் படத்தில் இருந்து....சுசீலா மா(??) வின் குரலில்...
    "சொன்னது நீ தான சொல் " இந்த பாடலை என் மனம் சஞ்சலப் படும் போதும் சரி..சந்தோஷத்தில் இருக்கும் போதும் சரி கேக்க மிகவும் விரும்புவேன்....
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    wow nice thread... saroj akka... kalakunga...
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    nantri ayms kanna.

    நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
    திரைப்படம்: உலகம் சுற்றும் வாலிபன்

    நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
    நீரலைகள் இடம் மாறி நீந்ததுகின்ற குழலோ
    மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ
    மான் இனமும் மீன் இனமும் மயங்குகின்ற விழியோ

    புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
    பருவம் ஒரு தளமாக போர் தொடுக்க பிறந்தவளோ
    குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
    தேன் சுவையை தான் குழைத்து
    கொடுத்ததெல்லாம் இவள் தானோ

    பவளமென விரல் நகமும்
    பசும் தளிர் போல் வளைகரமும்
    தேன் கனிகள் இரு புறமும்
    தாங்கி வரும் பூங்கொடியோ
    ஆழ்கடலின் சங்காக நீழ்ககழுதது அமைந்தவளோ
    யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ

    செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
    பொன்பதத்தில் வார்த்துவைத்த
    பெண்ணுடலை என்னவென்பேன்
    மடல்வாழை தொடை இருக்க
    மச்சம் ஒன்று அதில் இருக்க
    படைத்தவனின் திறமை எல்லாம்
    முழுமை பெற்ற அழகி என்பேன்

    நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ..........
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    Thanks and heres the favourite of your heart.....

    பாடல்: சொன்னது நீதானா சொல் சொல் சொல்
    குரல்: சுசீலா
    வரிகள்: கண்ணதாசன்
    இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    திரைப்படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்


    சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
    சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
    ஏன் ஏன் ஏன் என்னுயிரே
    (சொன்னது)
    இன்னொரு கைகளிலே யார் யார் நானா
    எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே
    (சொன்னது)
    மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
    மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே
    என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே
    இறுதிவரைத் துணையிருப்பேன் என்றதும் நீதானே
    இன்று
    (சொன்னது)
    தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
    தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா
    ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா
    ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா
    (சொன்னது)
     
    Last edited: Jun 21, 2010
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Thank you so much saroj!:bowdown lovely!:cheers
     

Share This Page