சிப்பியில் உறைந்திருக்கும் முத்தின் நிறம் வெண்மை என யார் சொன்னது இதோ உன் இமைச் சிப்பியில் விழித்திருக்கும் கரும்முத்து உன் கண்மணிகள்
வேணி ..உங்க படத்த பார்த்துட்டு நீங்களே சொன்ன கவிதை தான இது......... அழகான கவிதை..... முத்தின் நிறம் வெண்மையோ ..கருமையோ... முத்தின் ஒளி என்றும் என் முகத்தின் ..... மீது இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்...
கட்டி இழுக்கும் கருவண்டு கண்களை முத்திற்கு இணையாய் முத்தாரம் சூட்டிய வேணி அம்மா! தங்கள் முத்தழகை என்ன வென்று கூற! பிரமாதம்!:thumbsup
அது முத்தாய் இருந்தாலும் உன் விழிச் சொத்தாய் இருந்தாலும் மொத்தமா உன் கண்ணு எனக்கு ரொம்ப பிடிக்கும் தோழியே.....என்னை வரி வரியாய் கவி எழுத வைத்தவை அல்லவா .....
வெண் முத்து எனைக் கொல்லாது, கரு முத்து எனைக் கொல்லுதே, வார்த்தைகள் பல சொல்லுதே, வெண்மையை வாங்கலாம், கருமையை காதலிக்கலாம்.
உன் இமைசிப்பியில் விழித்திருக்கும் முத்து கருமை என யார் சொன்னது இருளாக இருந்தாலும் ஒளிர்கிறதே அது அவனைப் பார்த்து..... அழகு உங்கள் கவிதை......