12 -கிருஷ்ண லீலா! நடை பயிலுதல். அன்னையவள் யசோதை,தன் கண்மணிக்கு நடை பயிற்றுவிக்கிறாள். முன்று உலகினையும் தன் முன்றே அடிகளினால் தாண்டியவன். மகாபலியின் சிரசினிலே தன் பாதம் வைத்து பாதாளம் அனுப்பியவன். இன்று,அன்னையவள் கைபிடித்து ஒரு ஒரு அடியாக நடை பயிலுகிறான். வைக்கும் அடி தடுமாறி,கீழே விழுந்திடுவனோ,அதனால் புண்படுவனோ, என அன்னையவள் பரிதவித்து ,கண்ணன் அவன் கைபிடித்து நடத்துகிறாள், தன் மைந்தன் முகம் கண்டு,ஆனந்த கூத்தாடும் அவள் தீமை அண்டாதிருக்க வேண்டுகிறாள். யசோதை ,தத்தி தத்தி நடந்த மகன் நேர்நடை நடக்க கண்டு மகிழ்ச்சியுற்றாள் . தான் கண்ட காட்சியினை,தன் மனாளனுக்கும்,மற்றவருக்கும் காட்டுகிறாள். தன் மூத்த மகன் பலராமனை அழைத்து, தம்பியுடன் விளையாட பணிக்கின்றால். தயங்கி,தயங்கி நடை பயின்ற கண்ணன் முற்றம் வரை சென்று விட்டு திரும்புகிறான் . நிலை படியை தாண்ட ,முயன்று கீழே விழுந்து எழுந்தான் மூஉலகம் அளந்த பெருமாள். தன் மகனின் முயற்சியினை கண்ணுற்ற தாயவள் ,கைபிடித்து படியிறங்க படிப்பித்தால் . யசோதையுடன் கண்ணின் விளையாட்டை கண்டு மகிழ்ந்தது மூஉலகும். கண்ணனவன் லீலையினை விண்ணோரும்,ஞானியரும் கண்டு மெய்மறந்து நின்றனர்.
deepa ka.... ithu munnadi avatharathula nadanthatha? avangalukku already oru magan irukkaara? but avanga yaarayum sumanthu perala nu tv la serial paathatha gnyabagam...... but i am not sure.....
பலராமன்,வசுதேவரின் மூத்த மனைவி ரோஹினியின் மகன்,கோகுலத்தில் கண்ணனுடன் வளர்வான். இன்னும் சொல்ல போனால்,தேவகியின் 7 வது,கர்பத்தை மாயை ரோஹிணிக்கு மாற்றிவிடும். ரோகினி,நந்தரின் பாதுகாப்பில் கோகுலத்தில் இருப்பாள். பலராமனும்,கண்ணனும் சேர்ந்தே வளர்வார்கள் . பலராமன்,ஆதிசேசனின் அவதாரம்,ஆதிசேசன் விஷ்ணுவின் படுக்கை. ராம அவதாரத்தில்,லட்சுமணனாக உடன் வருவார். ராமாவதாரத்தில்,தம்பியாய் ஆனதால்,ராமரை கண்டிக்க இயலாது போனது,ராமரும் நிறைய துன்பப்பட்டார்.எனவே,ஆதிசேசன் இம்முறை அண்ணனாக பிறப்பு வேண்டும் என வேண்டி முதலில் வந்தார். கிருஷ்ணனின்,பிறப்பு,வளர்ப்பு,கோகுலத்து லீலை மட்டும் நான் கதை கருவாக எடுத்ததால் மற்றவற்றை விளக்க வில்லை.