[font="]மொழி மரணித்த இரவொன்றின் [/font] [font="]தாழ்வாரத்தில் சிதறிக்கிடக்கின்றன [/font] [font="]சில ஞாபகங்கள்.[/font] [font="]இருத்தல் தொலைந்த அவமானத்தில்[/font] [font="]உடைகிறது தேநீர்க்கோப்பை.[/font] [font="]சிறகறுந்த பறவைகளின் குருதி [/font] [font="]மிகுந்த வெப்பத்துடன் அறை நிரப்புகிறது.[/font] [font="]காரணங்கள் ஏதுமின்றி வீறிடுகிறது[/font] [font="]இந்த உயிர்மிருகம். [/font] - நிலாரசிகன் [font="][/font]
இவைகள் கோபத்தின் வெளிப்பாடுகளா???? கோட்பாடுகளா ???? மனிதனை மிருகமாக்கும் ஒரே உணர்ச்சி.கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிரு என்கிறது வேதம்.சத்தியமாய் சாத்தானுக்கு ஓதப்படவில்லை. தன்னை அறிகிறவன் மனிதன்.உணர்வு வேறுபாடே இல்லாதது மிருகம். தன் உணர்ச்சியில் தன்னையே தொலைப்பவன் மனித மிருகம். ஆழமான உணர்வு வரிகள்.நன்றி
Hi Nilarasigan, When i read urs, the following is raised in my mind... நான் உணவிடும் வரை அடங்கிகிடக்கும் என்னுளே உயிர்மிருகம்... உண(ர்)வு தீரும் நொடி முதல் நானே உணவாகிறேன் என் உயிர்மிருகத்திற்கு.... ஆழமான வரிகள்... வார்த்தைகளை பாமாலையாக்குவதில் நீங்கள் எப்போதுமே வல்லவர் தான்... இதுவும் அதில் விதிவிலக்கல்ல...
உங்கள் உணர்வெழுச்சியின் சிதறல்களில் கோபத்தின் வெளிப்பாட்டை நான் உணர்ந்ததால் என் வரிகளிலும் அவற்றின் சாயல் நன்றி.