அனைத்திலும் முன்னுரிமை தந்தாய் எனக்கு அரவணைக்கும் அன்னையிலிருந்து அலுவலக அலுவல்கள் வரையிலும், அன்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை என்னை நீ விட்டுப் போவாம் என்று ... ஆரம்பம் முதலே நான் ஆசை வைக்கும் எதுவும் எனக்கு நிரந்தரம் அல்ல என ஆசையின்றி இருந்த எனக்கு உன் நட்பின் துணை தந்து எனைத் தாங்கும் தூணாய் நீ இருக்கையில் எனக்குத் தெரியவில்லை நீ எனை நீங்கிப் போவாய் என்று... இதம் தர வேண்டிய உறவுகள் எனை விட்டு விலகியபோதும், அவர்தம் சுடு சொற்கள் சூறாவளியாய் எனை சுழற்றி அடித்தபோத்தும், எனை விலக்காமல் தோள் சேர்த்து நீ ஆறுதல் சொன்ன போது எனக்குத் தெரியவில்லை நீயும் எனை நீங்கிப் போவாய் என்று... ஈனக் கவலைகள் எய்திடும் பொழுதினில் இதம் சொல்லி எனை பதமாய் நீ தேற்றிய பொழுதுகளில் எனக்குத் தெரியவில்லை நீயும் எனை நீங்கிப் போவாய் என்று ... உன் உறவுகள் அனைத்தையும் எனக்கும் உறவாக்கி, என் உயிருக்கு நீ உரமேற்றிய பொழுதுகளில் தெரியவில்லை என் உயிரை நீ தவிக்க விட்டுப் போவாய் என்று ஊமையாய் என் மனம் கண்ணீர் வடிக்கையில் என் ஒரு சொல்லில் மனமறிந்து என் மனவாட்டம் நீ போக்கிய பொழுதுகளில் தெரியவில்லை என் மனதை ஊனமாக்கி நீ போவாய் என்று... எல்லாரையும் போல அல்ல நீ, எனச் சொல்லி, என் எண்ணம், எழுத்து, ஆக்கம் என அனைத்திலும் ஏற்றம் புரிய வைத்த போது எனக்குத் தெரியவில்லை நீ எனை நீங்கிப் போவாய் என்று .... ஏக்கம், துக்கம் என எதுவாக இருப்பினும் உன் மொழி கேட்டு விட்டால் கனத்த என் இதயமும் காற்றாய் உருகி விடும், அப்போதெல்லாம் தெரியவில்லை உன் பிரிவுக்கு அது ஒத்திகை என்று..... ஐயம் ஏதுமின்றி என்னிடம் அன்பு காட்டியவன் ஒளிவு மறைவு இன்று விஷயங்கள் பகிர்ந்தவன் ஓயாத உன் அன்பால் என் இதயம் காயாது காத்தவன் இப்படி அத்தனையும் தந்து எனை அனாதையாக்கியவன் அழகாய் ஒரு நந்தவனம் எனக்காய் அமைத்து மனம் வீசும் மலர்செடிகள் மலர வைத்து பறவையாய் எனை பறக்க வைத்து அழகு பார்த்தவன், விட்டுப் போனது என்ன???? சிறகுகள் எனக்கிருந்தும், பறக்க வேண்டும் என்ற என்னைத்தை மட்டும் துறக்க வைத்தவன்.. நண்பனே எங்கிருக்கிறாய் நீ???? எங்கிருந்தாலும் வளமாய், நலமாய், நீ வாழ வேண்டும்.... எப்போதாவாது, உலகின் ஏதோ ஒரு மூலையில் எனை சந்திக்கையில், யார் இது என சிந்திக்காமல் என் கண்ணீர் உனக்கு எனை அடையாளம் காட்டும் (ஈருடல், ஒருயிராய் எனக்கென இருந்த நண்பனை நான் பிரிந்து, இன்று அவன் நினைவுகளில் நான்... என்னுள் புதைந்த நினைவுகள், மழை பட்டதும் வரும் மண் வாசமாய் புறப்பட்டது. நீளம் கூடிவிட்டது. என் வருத்தத்தின் ஆழமும் கூட.... மன்னிக்கவும்)
ungal varigal natpin aalam sollum vidham miga azhagaay, manadhai urukkum vidhamaay irunthathu... ungal kavithai padithu yenakkum yen friends ninaivukku varugindraar... yelloraiyum pirinthu ingu vandhu avangalai yethanai miss panren yendru indru ungal kavithai padithu unarnthen yendru thaan solla vendum....
friends are really great venima!! that too the real friendship lives till our life ends. am i right?? like that you are also remebering your friend na!! but its very rare to get such a friendship!! hope we are binding the good friendship between us. unga kavithai alaga irukku unga kangal mathiri!! (sorry not giving the first fb)
கொடிது கொடிது பிரிவுத் துன்பம் எதனினும் கொடிது...... நண்பனே உனக்கு இவள் வெண் சங்கு.... உன் ப்ரிய சகி உன் பிரிவால் உன் நினைவால் தன் துக்கம் திறந்து புத்தகமாய் நட்புக்கு வெண்பா பாடி இருக்கிறாள் நீளமான வரிகளில் அவளது அன்பின் ஆழம் அறிவாயோ.... நீயும் இக்கணம் அதை உணர்வாயோ ..... உன்னை வாழ்த்து இந்த தூய மலரின் மனம் தனை நீ மறக்க மாட்டாய் என நானும் நினைக்கிறேன் மலரே உன் கண்ணீர் தேவை இல்லை உன் மணம் அவன் நாசியில். பசையிட்ட பசிய நினைவுகள் எப்போதும் பசுமையாய் இருக்கட்டும் உங்கள் இருவரின் இதயத்திலும் வாழ்த்துகிறேன் உங்கள் நட்பின் ஆழம் இன்னும் பெருக....... My friend...am totally out of my control...had written my reply with clouded eyes....
பிரிந்தால் சேரனும்... சேர்ந்தால் பிரியனுமா??? பிரியமானவர்களை... சேர்ந்து இருப்பதைக் கற்க கசடற - இயலுமா? பிரியமானவர்களை பிரியாமல் இருக்க கற்கும் மாணவர்கள் தானே நாம் என்றுமே... விளைந்த வருத்தங்களை நீக்கி விளையும் உறவுகளை பிரியாதிருக்க வாழ்த்துக்கள் வேணி. கவிதை உருக்கியது, மனதை இறுக்கியது.
Wondeful poem Veni...... Pirivu yeppozhudhume thunbam tharum visayam dhan. Adhuvum nanbargalai pirium pozhudhu andha thunbam rettippagiradhu.
என்ன சொல்வது தோழி.....வாரத்தைகள் இல்லை உங்களின் பிரிவுத் துயரத்தை துடைக்க.... எல்லா உறவையும் ஒரு நாள் பிரிய கூடும் என்பது நாம் அறிந்ததே ...இருப்பினும் அதை அனுபவிக்கும் போது...தான் தெரிகிறது அத்துயரம் எவ்வளவு கொடுமை என்று.... இந்நாளில் உங்கள் நண்பரும் உங்களை நினைவு கொள்வார்..என்று ஆறுதல் அடையுங்கள் தோழி.... கவிதை மிக உருக்கமாக உள்ளது......
innum unga koodave thaan irukkanga unga friend ungal eluthu moolamaaga..... pirivin thuyarai sollum ungal varigal arumai veni kutti...... aanaal i am so sad.... nee sirida thangam... appa thaan nalla irukkum....
நீளம் கூடினால் அது தங்கள் நட்பின் ஆழம் கூறுவதை! பிரிந்த நட்பின் வலி அனைவரும் அறிவர்! இது அனைவருக்குமே கடவுள் அருளிய ஒரு சாபமோ என்னவோ? வருந்த வேண்டாம் தோழி! கவி வரிகள் அற்புதம்! மீண்டும் சந்திப்பாய் காத்திரு அந்நாள் விரைவில் வரும்!:thumbsup