நேரம் அறியாமல் தொட்டு ரசித்தேன்! நின் அழகு முகத்தை! மனம் இல்லாமல் செல்கிறேன்! இங்கிருந்து! என்ன செய்வது? காற்றாகிய நான் சுழன்று தானே தீர வேண்டும்!:bonk
அன்புள்ள யாமினி, ரொம்ப அழகு உங்கள் கவிதை. அந்த அழகு முகம் இப்படி சொல்லுமாய் இருக்கும்... உன் வருகைக்காய் இதழ் விரித்துக் காத்திருக்கும் என்னை நீ தீண்டும் அந்த நிமிடம் போதுமே எனக்கு ...
அழகான வரிகள்... இதை படிக்கையில், ஒரு மலரை காதலிக்கும் காற்று அதை சுத்தி சுத்தி வருவது என்னால் imagine பண்ண முடிந்தது....
உனைத் தீண்டியதால் தான் அந்தக் காற்று சுழல்கிறதா? இது அறிந்தும் உன் காதலன் உனைத் தீண்டுவானா? அவன் என்ன ஆவானோ? கோவிந்தா....கோவிந்தா....
அதற்கெல்லாம் வருந்த மாட்டார்! அதன் தலையெழத்து என்று விட்டு விட வேண்டியது தான்! இது தான் அவர் பதிலாய் இருக்கும்!:bonk நன்றி நட்ஸ்!:cheers
தென்றலின் தீண்டல் இன்பமாய் பிரியும் போது சுகம் கானலாய் மீதும் தென்றல் தீண்டும் என்னையும் தீண்டித் தாண்டிச் சென்றது உன் வரிகள்......