11 -கிருஷ்ண லீலா! கண்ணன் தவழ்தல்; முகுந்தன்,முன்னங்கால் மண்ணில் பட,கைகளை கூட்டி தவழ்கின்றான் , நந்தர் தம் மாளிகையில்,செம்பொன் தூண்கள் சூழ் முற்றத்திலே, கைகளை முன்னால் வைத்து,கால்களை அதனுடன் கூட்டி தவழ்கின்றான், தான் நகரும் அழகினை,தானே தூணில் கண்டு குதூகல குரல் எழுப்பி, மற்றொருவன் துணையாய் விளையாட கிடைத்தான் என்று களித்தான் , எதிர் தவழ்ந்த ,தன் பிம்பம் நோக்கி,பால் பற்கள் தெரிய நகைத்தான். தன் மகன், செய்கை கண்டு மனம் மகிழ்ந்த அன்னை புன்னகை பூத்தாள். பரம்பொருளே,தரையினில் தவழ்ந்திட பூமித் தாயும் சிலிர்கின்றால் . உலகம் காட்டல்; தவழ்ந்த கண்ணன் ,தவழ்ந்த படி, படி தனை தாண்டி மண்ணில் சென்று, தாய் காண பொழுதினிலே,ஒரு பிடி மண்ணை ,தன் வாயிலிட்டான், தாய் யசோதையவள்,தன் மகனின் திருட்டுதனம் கண்டு கொண்டாள். கம்பெடுத்து,வேகமாய் விரைந்து வந்து ,மகனை அதட்டி கேட்டாள், ஆவென காட்டு,மண் அள்ளி வாயில் போட்டது உண்மைதானே என்று, தாயிடம்,ஏதும் அறியா பாலகனாய், கண்ணன் வாயை திறந்துக் காட்ட, அதனுள்ளே,முன்று உலகும் தெரிய,தாயும்,மகனும் சேர்ந்து தெரிய, தலை சுற்றி,கண்மூடி ,நாவரண்டு மூர்சையுற்றால் நந்தன் ராணி. கிருஷ்ண லீலைதனை ,வர்ணிக்க வார்த்தை தான் உண்டோ?
dear deepa mannai unnum kannanin kurumbaiyum yasodhavukkum matru ulagathaarukkum thaan yaar endru kaattiya azhagaiyum arumaiyaana vaarthayaal vivarithu irukkireergal. mei maranthen. ganges
பாராட்டு தந்த கங்கைக்கு ,என் மனமார்ந்த நன்றிகள் பற்பல,உங்களது ஊக்கத்தால் மேலும் எழுத துணிகிறேன் .தொடர்ந்து,படித்து என் அறுவையை சமாளிப்பீராக!