நீ ஸ்ரீராமன் இல்லை ஆனால் சீதையை தேடுகிறாய் இது என்ன நியாயம் அந்த கால சீதை தீ குளித்தாள் இந்த கால சீதை உன்னை தீ குளிக்க செய்வாள் எச்சரிக்கையாக இரு இளைஞனே
"நாங்கள் நீ ராமனாய் இருக்க வேண்டும் என்று கூட எதிர்பார்க்கவில்லை ராவணனாய் எங்களை வதம் செய்யாமல் இருந்தாலே போதும் என்கிறோம்" இது ஒரு இளம் பெண்ணின் புலம்பல் .. அவர்களிடம் குறை இருந்தாலும் வருபவள் குறை(???//) இல்லாமல் வரவேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் கூட்டம் எப்போதுமே அதிகமே . உங்கள் வரிகளை படிக்கும் போது பைபிளின் வாசகம் நினைவுக்கு வருகிறது உன் கண்ணில் உள்ள உருதிரத்தை(அழுக்கு) நீ எடுக்காமல் உன் அயலானுடைய உருத்திரத்தை நோக்குவதேன். எச்சரிக்கை கொடுத்துள்ளீர்கள் பார்க்கலாம் எத்தனை பேர் பம்முகிறார்கள் என்று.
ருக்மணி, ராமனாக இருந்தாலும்,இப்போது தீ குளிக்க செய்யும்படி கேட்க இயலாது, மகளிருக்கான சட்டங்கள் அதை ஒரு போதும் அனுமதிக்காது, தந்தூரி அடுப்பில் வைத்தாலும்,அதை ஆராய்ந்து தண்டனை கொடுக்கும் காலம் வந்து விட்டது. எனவே ,உங்கள் கருத்தை அதிக அழுத்தம் கொடுத்து வலியுறுத்துகிறோம்.
அன்பு சரோ உங்கள் fb.நன்று. அசுரர் குலத்தையே பூமி தாங்கமுடிய வில்லை.மனிதர்களும் அசுரர் ஆனால் என்ன செய்வது. ருக்மணி
அம்மா தாயே உன் கவிதைகிட்டே என் கவிதை எல்லாம் நிற்காதும்மா.நீ,வேணி,யாமினி,வைஷ்ணவி, ராம், நட்ஸ் மற்றும் பல நம் நண்பர்கள் கவிதை எல்லாம் சூப்பர்.எப்படி பின்னூட்டம் குடுப்பது என்றே தெரியவில்லை . வாழ்த்துக்கள் தேவப்ரியா