8 -கிருஷ்ண லீலா. பூதனா சம்ஹாரம். கண்ணன் இருக்குமிடம் ,அறிந்து கொண்டான் கம்சன், ஆட்டமும்,பாட்டுமாய் ஆயர் பாடி குதூகலிக்க ,ஒற்றர் படை சொல்லியது கண்ணனது வரவை. குழந்தை தனை யமனுலகம் அனுப்பிவைக்க, ஏவினான் பூதனையை. பூதனை,பெயருக்கேற்ற உருவம் கொண்ட அரக்கியவள் , அழகான சுந்தரியாய்,கபட உரு கொண்டு,கோகுலத்தில் தான் புகுந்தாள். பால் சுரக்கும் ,புண்ணிய தனங்களிலே விஷம் தடவி விரைந்திட்டாள், கண்ணன் தனை காண வரும் மாது போல் ,அவனருகே அமர்திட்டாள், யசோதையின் பாக்கியத்தை வாயார புகழ்ந்திட்டால் , நேரம் செல்ல,செல்ல,ஒவ்வொருவராய் வெளி செல்ல, யாருமற்ற நேரத்திலே ,மாயவனை ஏந்திட்டால், தன் விஷம் தோய்ந்த மார்பினின்று பால்தனை புகட்டிட்டாள், பால் மட்டும் அருந்தும் பாலகனா இந்த மாயன், பாலுடனே,உயிர் தனையும் சேர்த்து உறிஞ்சிட்டான் , தன் உயிர் போவது உறுதி என அறிந்திட்ட பூதனை, குழந்தையென வந்த தன் காலன் தனை வீசி விட்டு, வீட்டை விட்டு வெளியேறி காடு புகுந்தாள், தன் உயிர் போகும் வேளையிலே வேதனையில் வீறிட்டாள் , வீழ்ந்த பின்னே,தன உருவம் பழையபடி மலை போல் பெற்றாள், வினை விதைத்தவள் வினை அறுத்தாள், நடந்த மாயம் அறியாத ஆயர் மக்கள் அதிர்ச்சியாய் உறைந்தனரே !
enakku antha pattu...romba pidikkum..."Aayar padi maligaiyil" unga kavithai antha pattai gyabagapp paduthigirathu,...romba nalla irukku...deepa...
dear latha, actually,that song,aayar padi maligaiyil is like our family song,my son learn this through his master,and in two places he sung that and got prizes,while he was at 1st std. so we all used to sing this and kuraiyondrum illai song. these songs only make me to write this.