7 -கிருஷ்ண லீலா. யசோதையின் தாலாட்டு. ஆயர் பாடி மாளிகையில் ,மாயனவன் துயில் கொள்ளும் முன்னே, தாயவள் தான் பட்டபாடு,மாதவனே தான் அறிவான், நந்தன் மகன் ,முகம் கண்டு கொஞ்சுகிறாள் அன்னையவள், தாய்மையினால் தூண்ட பெற்று,அள்ளி, அள்ளி அணைக்கின்றாள் கொஞ்சி குலவுகிறாள் ,சீராட்டுகிறாள் ,முத்தமிட்டு மகிழுகிறாள் . வண்ண வண்ண வார்த்தை கொண்டு,கொஞ்சுமொழி வார்த்தைகளால் , மெல்லிய குரலெடுத்து ,தாலாட்டு பாடுகிறாள் , அன்பான யசோதை,நித்திரையை அழைகின்றாள், நித்திரை தேவியே நீ ,நில்லாமல் வந்திடுவாய்., என் மகன் உனை அழைக்கின்றான்,சீக்கிரமே வந்திடுவாய். அவனருகே வர ஆயிரம் கோப,கோபியர் தவமிருக்க, உன்னை மட்டும் நான் ரகசியமாய் அனுப்பிடுவேன் அவனருகே. எங்கு சென்றாய் ,நித்திரையே,இச்சனமே நீ வாராய் . அன்னையின் அழைப்பின் பேரில் நித்திரையும் வந்திட்டால் கண்ணனிடம் மயங்கி அவள் ,அவனிடமே சரணடைந்திட்டால் , கண்ணன் ,அவன் உறங்க கண்டு,யசோதை தன் தாலாட்டை நிறுத்தி, அருகே உள்ள மற்றவரை,அமைதி காக்க சைகை செய்து , அனைவரையும் அனுப்பிவிட்டு,வெளிச்சம் தனை மறைத்து விட்டு, தன் மகன் எழுவதற்குள் மற்ற வேலை முடிக்க செல்ல முனைகையிலே, செல்ல சினுங்கள்,சில செய்து,தனகத்தே அழைத்து கொண்டான் கண்ணன் அவன். இதுபோலே,உறங்குவதும்,விழிப்பதுமாய்,மாதவன் விளையாட, தன் மகனை உறங்க செய்ய தாய் பட்ட பாடு சொல்லி முடியாது.
ivvalavu azhagaga thalattu padinal....thookam engirunthu varum...pattai kekkathane thondru.... nanraga ullathu...deepa...
aayarpaadi maaligaiyil thaai madiyil kandrinai pol maya kannan thoonguginaraan yasodaiyin thalaatile yasodaiyin thaalaatu padu super. Ramavyasarajan