கிருஷ்ணா லீலா-4 கம்சனின் கலக்கம் ! வசுதேவர் கோகுலம் சென்று திரும்பிவிட்டார், கண்ணனை அவ்விடம் விட்டு,மாயையை இவ்விடம் சேர்த்துவிட்டார் , சிறைக்கூடம் பழையபடி மூடிக்கொள்ள,விழித்து எழுந்தனர் காவலர். குழந்தை அழும் குரல் கேட்ட காவலன்,விரைந்திட்டான் கம்சனிடம் ! தேவகியின் எட்டாவது குழந்தை,கம்சனுக்கு எமனாவான் என்பது வாக்கு! இதோ வந்துவிட்டது எட்டாவது,செய்தி அறிந்தவுடன் விரைகின்றான் கம்சன். என்ன ஒரு வேகமாய்விரைகின்றான் கம்சன்!தாய் மாமன் அந்த குழந்தைக்கு! இந்த வேகம் தன் தங்கை மகவை கொஞ்சி மகிழவா?இல்லவே இல்லை ! பிஞ்சுதனை ,நஞ்செனவே கொள்ளவே விரைகின்றான். தேவகி கலக்கமுற்றாள்,முன் எழுவர் சென்ற பாதை இதுவும் செல்லுமோ என்று? கம்சன் வந்தான்,பிள்ளை தனை கையில் ஏந்தி,வீசிட்டான் சுவற்றை நோக்கி, வீசிய பிள்ளை,மேலே உயர்ந்தது ,அந்தரத்தில் நின்றது, மாய தேவியவள்,மாயவனின் சோதரி,எச்சரிக்கை விட்டால் கம்சனுக்கே! அடே!கம்சா!உன் அழிவு நெருங்கியது! உனை அழிக்கும் பிள்ளை நானல்ல! அது பத்திரமாய் வளர்கிறது,வேண்டிய இடத்தில்! என சொல்லி,மாயமாய் மறைந்தது மாயை! பூட்டிய கதவு ,பூட்டியபடி இருக்க,இது எப்படி சாத்தியமென, கடிந்திட்டான்,காவலரை,கலவரமாவது,இப்போது அவன் முறையானது! தன் எதிரி எங்கே என தேடி,தேடி அலைகின்றான் கம்சன்.
கிருஷ்ண காவியத்தை கண் முன் நிறுத்தும் அழகிய கவியே!:bowdown வாழ்த்துக்கள் பல! நல்ல முயற்சி! :thumbsup மேலும் எழுதிட நாங்கள் அதை படித்து மகிழ்ந்திட!:cheers