மாலை காற்று மனம் மயக்க! அதை அனுபவிக்கவே தங்கள் ஒய்வு நேரங்களில் கடற்கரை செல்லும் பலர்! குடுத்து வைத்தவன்! வேலையே தினம் இந்த காற்றில் தான்! சுகமாய் அனுபவிக்கிறான்! கடற்கரையில் சுண்டல் தொழிலாளி!
sundal வியாபாரி கொடுத்து vaithavan தான் maamul vaangum அதிகாரிகளிடம் கொடுத்து vaiththavan தான் நல்ல கவிதை anbu thozhi
சுண்டல் வியாபாரியை நான், ஒரு சமுதாய சென்சார் சேவகனாய் காண்கிறேன். அவர் அவ்வப்பொழுது வந்து இடஞ்சல் தராவிட்டால், கஷ்ட காலம், என்னவெல்லாம் நடக்குமோ இன்றைய கடற்கரை காதலில். நான் சொல்லுவது ஒரு சில அந்த மாதிரி காதலர்களைப் பற்றியே. இந்தக் காதலர்களுக்கு கொடுத்து வைத்த சுண்டல் காரன், அவர்கள் இன்பத்தை கெடுத்தும் வைப்பவன்.
உண்மை தான் நட்ஸ்! ஆனால் சுண்டல் வியாபாரியை பற்றி யார் கவலை படுகிறார்கள்?? மனிதர்கள் பக்கத்தில் இருந்தாலும் அவர்கள் வேலை நடந்து கொண்டு தான் இருக்கிறது! நானும் விவேக்கும் ஒரே முறை தான் கடற்கரை சென்றிகிறோம் அதற்கு பின் செல்ல பிடிக்கவில்லை! காந்திசிலை பக்கத்தில் நடந்து சென்ற என்னை கை பிடித்து வேறுபுறம் அழைத்து சென்றான் என்னவென்று கேட்டதற்கு அந்த புறம் பார்க்காதே என்றான்! எனக்கு சிரிப்பு தான் வந்தது! இதையெல்லாம் இங்கு சகஜம் என்றேன்! அதற்கு அவருக்கு கோவம் வந்தது பாருங்கள்! பொண்டாட்டியாய் நினைப்பவளை எவனும் இப்படி வெளியிடத்தில் தொடமாட்டான் என்றான்! எனக்கு அப்படியே கை தட்டலாம் போல் இருந்தது! clap
காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்தது அந்தக் காலம். கூடவே சுண்டலும் வாங்கறது இந்தக் காலம்... இங்கே காத்து யாமினி கவிதை. கூட சூடான, சுவையான, தேங்கா, மாங்கா, பட்டாணி போட்ட சுண்டல் இங்க எல்லாரோட FB-yum