செந்தமிழ் நாட்டு தமிழச்சியே!!! துள்ளி திருந்து கொண்டிருந்தாள் மான் குட்டியாக சிறகடித்து பறந்த வண்ணம் இருந்தாள் சிட்டு குருவியாக வயதை அடைந்தாய் உன் துள்ளல் குறைக்கப்பட்டது சிறகு உடைக்கப்பட்டது உனக்கு குறுக்கே உலக்கை இடப்பட்டது தமிழச்சியே இது நம் கலாசாரம் கலங்காதே உனக்காக இயற்கையே இருக்கிறது தமிழச்சியே உனக்கும் இயற்கைக்கும் என்னே ஒரு தொடர்பு தமிழச்சியே ! நீ தாவணி கட்டும் வயதை அடைந்தாய் உனக்காக தென்னை ஓலையால் வேயப்பட்ட இடம் பரிசளிக்கப்பட்டது தமிழச்சியே ! உன் கூந்தலை அழங்கரிக்கவே படைக்கப்பட்டனவோ பூக்கள் உன் கூந்தலில் இருக்கும் போது மட்டும் அவைகளின் வாசனையும் பொலிவும் கூடுகிறதே தமிழச்சியே! நீ திருமண வயதை அடைந்தாய் தென்னை பாலை அழங்காரமும் வாழை மர தோரணமும் உன் மண பந்தலை மெருகேற்ற வந்தன பெண்ணே ! நீ பெண்ணாக மட்டும் பிறந்திருந்தால் இந்த அனைத்தையும் நீ இழந்திருப்பாய் நீ தமிழச்சியானாய் இயற்கை உனதானது தமிழச்சியே இயற்கையே உனதானது பின் எதற்கு செயற்கையான வாழ்க்கைக்கு பழக்கமானை நெற்றியில் பொட்டு கூந்தலிலே பூ விலை உயர்ந்ததாம் பட்டு நூல் அதுவும் இயற்கை தான் அதிலே செய்யப்பட்ட தாவணி சேலை இவ்வளவு அழகான விசயங்களை நீ வெறுத்தது ஏனோ!! அயல் நாட்டார் உன்னை கண்டு ஏங்கி கொண்டிருக்கையில் உனக்கு ஏன் இந்த அயல் நாட்டு மோகம் நம் கலாசாரத்தை புத்தகத்தில் மட்டும் காண வேண்டிய கொடுமையை நிகழ்த்தி விடாதே கலாசாரம் காலாவதி ஆகும் நாள் உன் சிறப்பு காலாவதி ஆகும் நாள் இயற்கையே உன்னை அணைக்க வரும் பொது நீ அதை தடுக்காதே ஏற்றுக்கொள்
இயற்கை எமதே அதில் இருக்கும் இனிதும் எமதே செந்தமிழும் எமதே அதை தீண்டும் இன்பம் எமதே என் மனம் சிறகடித்துப் பறக்குதே உன் சிங்கார சிருங்கார வரிகள் கண்டு. மகுடம் சூடியது போல் மனசெல்லாம் ராணி போல் ..... தமிழச்சிக்கு காவியம் படைத்த மறத்தமிழனுக்கு மனம் திறந்த, மடை திறந்த பாராட்டுக்கள் .
இது கனவா ?? நிஜமா ?? அக்கா மிகவும் சந்தோசமாக உள்ளது உங்கள் முதல் பின்னூட்டத்தை கண்ட எனக்கு. தாங்கள் எனக்கு முதலாவதாக தரும் முதல் பின்னூட்டதிருகும், உங்களுக்கும், தமிழச்சிக்கும் என் நன்றிகள்.
செந்தமிழ் நாட்டு தமிழச்சி ! பாடலில் மட்டுமே தமிழச்சி! ராம் குறிப்பிடும் காலம் மலை ஏறி சென்றதே! தாவணி,கிராமங்களை விட்டும் மறைகிறதே! ஆனால் நினைவுட்டிய ராமிற்கு வாழ்த்துக்கள் !
thank you very much ka............. neenga sonna visayaththayum naa kavithai la add pannalaamnu thaan irunthen...... apram ippadi solluvaanga thirupur la irunthu ram vanthaa naathikam pesunaanu....... ethuku namaku ithellaam nu vittuten
ram, you said is right. ponnungala pathi eluthum pothu kavanam athigam thevai, il samuthayathil elutha ,miga,miga kavanam thevai! keep it up.
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குறியே நெசவு செய்யும் திரு நாட்டில் நீச்சல் உடையில் அலையுறியே இந்த பாட்டு தான் ஞாபகம் வருது... கவிதை அருமை ராம்...
ram, now it is okay! அரிதாய் வரும் பாவாடை ,தாவணி ! அதிலும் வேண்டும் ,ஆரி,சிமிக்கி வேலைபாடு ! இல்லையெனில் ,வேண்டவே வேண்டாம் என்பர் எம் குலகொழுந்துகள் !
அன்புள்ள ராம், காண்பதற்கே அரிதாகி, கருத்தை விட்டு மறைந்தே போய்விட்ட உடை....... உங்கள் கவிதை மிக அருமை. :thumbsup