இன்னுமொரு மஞ்சள் மலர் இன்று கொன்றை மலரின் ஒரு வகை புலிநகக் கொன்றை என்ற வேறு பெயரும் உண்டு புலி நகம் போன்ற இதழ்களை உடைய மலராதலால் இப்பெயர். காரணப் பெயர் அடர் மஞ்சளில், ஐந்து இதழ்களில், அழகாய் மலரும் இம்மலர் கொத்துக் கொத்தாய் பூக்கும் கத்தை மலர்களை காண்கையிலே உள்ளம் கொள்ளை போகுதே, படத்தில்தான்... சரங் கொன்றை கண்டிருக்கிறேன் இந்த கொன்றை இன்னும் காணவில்லை மலர் நடுவில் மகரந்தம், தேனிக்களுக்கான பந்தம், மலர்களின் வாசனை சற்றே மந்தம் மற்றபடி கண்ணுக்கு வசந்தம் சற்றே நீண்ட அடர் பச்சை நீள்வட்ட இலைகள் பச்சையும் மஞ்சளுமாய் கை நிறைய அள்ளிக் கொள்ள இச்சை ஊட்டும் தோற்றம், வேறு பெரிதாய் ஒன்றுமில்லை மாற்றம் காலியிடங்களிலும், ரோட்டோரங்களிலும், காடுகளிலும் வளரும் செடி வகைத் தாவரம் Name : Sophera Senna Botanical name: Senna sophera Family: Caesalpiniaceae (Gulmohar family)
iatha malarkalai kanum pothu ungal manam kollai pogirathu........ungal malar kavithai engal anaivar manathaiyum kollai adithu sendru vidukirathu......thozhi....... arumaiyana kavithai........
Dear Latha, Ippadi karuththai kavarum pinnoottam kidaikkumaanaal innum niraiya ezhuthalaam thaan thozhi. Nandrigal pala ungalukku
Dear veni, மற்றும் ஒரு அழகிய மஞ்சள் பூவைப் பற்றிய கவிதை தந்த தோழிக்கு நன்றிகள் பல.....எனக்கு மஞ்சள் நிறம் மிகவும் பிடிக்கும்.....ஞாழல், கொன்றை.....என்ன அழகான பெயர்கள்!!!!....
உங்களுக்குமா??? எனக்கும் தான். மஞ்சள் நட்பைக் குறிக்கும் நிறம் ஆகையால் எனக்கு மிகவும் பிடிக்கும். உண்மைதான், பெயர்கள் மிக அழகுதான். கவிதை படித்து ரசித்து அழகாய் கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
sweet n lovely yellow colour flower veni ma!! and cute n nice poem too.........nice pictures also......lovely to see in this hot summer..........