நாட்டியம் ஆடவும் பெண் வேண்டும் உயிர் நாட்டினை ஆளவும் பெண் வேண்டும் வீட்டினை ஆளவும் பெண் வேண்டும் குழந்தை பேணி வளர்க்கவும் பெண் வேண்டும் அண்ட சராசரமும் அவள் தானே அவள் இல்லாமல் அவணி இல்லை தானே தொட்டில் சத்தமும் அவளாலே குழந்தையின் சிரிப்புச் சத்தமும் அவளாலே கணவன் இறந்தவுடன் உடன் கட்டை ஏறினாள் பெண் அன்று இன்று குழந்தைகளை காக்கவே வாழ்கிறாள் கண் என்று கருணையின் பிறப்பிடம் அவள் தானே அவளுக்கு இணையும் அவள் தானே தேவர்களுக்கு அமிர்தம் அங்கு தாய் ஊட்டிடும் பாலே அமிர்தம் இங்கு எத்தனை தடைகள் உனக்குண்டு அதனை கடக்கும் மனஉறுதியும் உனக்குண்டு உன் பெயரினை கெடுக்கும் ஜென்மங்களும் இங்குண்டு அவர்களுக்கும் என் வரியுண்டு ஏய் ஊழல் செய்யும் அரக்கர்களின் மனைவிகளே உன் கணவன் சுரண்டி வரும் பணத்தின் (ரத்தத்தின்) சுகத்தில் மயங்கிய கள்ளிகளே கள்ளிச் செடியிலும் தித்திக்கும் கனி இருக்கிறது உங்கள் மனதிலும் இறக்க உணர்வு இருக்கும் என நம்புகிறேன் கள்ளியே முதலில் நீ திருந்து பின் உன் கணவனை திருத்து உன் நாடும் நாட்டு மக்களும் நலம் பெறுவார்கள் உன்னையும் சேர்த்துதான் சுயநலம் என்னும் சிறிய போர்வையை போர்த்தி கொள்ளாதே அதனை விட்டு வெளியே வந்து பார் எத்தனை பெரிய போர்வை இருக்கிறது அதற்கடியில் எத்தனை மக்கள் இருக்கின்றனர் என்பது உனக்கே தெரியும் மாறி விடு நாட்டை மாற விடு பெண்ணால் முடியாதது எதுவும் இல்லை பெண் நினைத்தால் நொடியில் மாறும் உலகம் பெண் வாழ்க
பெண்ணின் பெருமை பேசி அவர்களின் மகிமை உணர்த்திய நீ, அவர்களில் சில புல்லுருவிகளின் முகத் திரையையும் கிழித்து விட்டாய். ஆணோ, பெண்ணோ, யாராயிருந்தாலும் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். வீட்டிற்கும், நாட்டிற்கும் நல்லது. நல்ல கருத்து ராம்.
paataellam nalla dhaan irukku aana idhu edhukku???? "கட்டில் சத்தமும் அவளாலே '' :biglaugh:biglaugh:biglaugh:biglaugh chinna vayasu pulla enna pandradhu?? veetla seekiram ponnu paakka solla vaendiyadhu dhaan!!!!
naan koda dhaan pengal paththi ezhudhinaen avanga maenmayai ezhudhanum adha vittuttu kattil thottil nu ellam vayasu kolaaru!!!!!!:rant:rant