பாரதத்தின் தென் முனை நீ கன்னியா குமரி நீ மூன்று வர்ணங்கள் தெளியும் முக்கடல் சூழ்ந்த சுந்தரி நீ அலைகள் தழுவிடும் உன் கரையில் எத்தனை நிறமுள்ள மணல்கள் சிப்பிகள் அலங்கரித்த மணலில் இங்கு சிறுவர்கள் உழுது மகிழுவரோ பகலவன் உதிப்பதும் மறைவதும் இங்கே காணாத மானிடர் உளரோ பௌர்ணமி நாளின் மாலை ஒருங்கே பகலவன் மறைவதும் நிலவு உதிப்பதும் அது உந்தன் கடல் நீரில் தெளிவதும் கண்டு மயங்காதவர் எவருண்டு சிறு வயது முதலே உன்னெழில் அனுபவிக்கும் எனக்கும் ஒரு குறையுண்டு இத்தனை அழகினை அடக்கிய நீ இன்னும் கன்னியாக இருப்பதுதான் என்னவோ ?
Dear Ganges, Miga arumai. Kadalukku ennai azhaithu chentruvitirgal. Kanniyana kumariyai patri arumaiyaga ezhuthinirgal. Meenakshi
sorry ganges intha azhakai anubavikkaatha abaakkiyasaali naanaakaththaan iruppen. and your poem push me to go there
Dear Meenakshi, thank you for the fb dear. neengalum neril aval azhagai anubhavithiruppeergal endru nambugiren. thanks. ganges
சூப்பர் கற்பனை கங்கா. எனக்கும் ஒரு கற்பனை: விவேகானந்தர் இங்கு வந்து, பிரம்மச்சர்யத்தை நிலை நாட்டியவுடன், இந்த சுந்தரிக்கு தன் கன்னித் தன்மையை, போற்றி பாதுகாக்கத் தான் தோன்றுகிறது போலும்.