நேர்முகத் தேர்வு என்றார்கள் சென்றேன் அமரும் முன் எனது பட்டதை கொடுத்தேன் என்ன என்றார்கள் பட்டம் என்றேன் வேண்டாம் என்றார்கள் அமர்ந்தேன் வேண்டும் என்றார்கள் என்ன என்றேன் லஞ்சம் என்றார்கள் அந்த பட்டத்தை நான் பெறவில்லை என்றேன் உனக்கு வேலை இல்லை என்றார்கள் வெளியேறினேன் சிரித்துக்கொண்டே நமது அரசை நினைத்து அழுதேன் என் குடும்பத்தை நினைத்து :cheers
யாரேனும் லஞ்சம் கேட்டால் என்னிடம் விவரம் சொல்லுங்கள், புகார் சொல்லுங்கள்.......சென்னை மாநகர காவல் துறை ஆணையர்!!!!!! Raman better dart to his cell.))))))))) Nice thought from your core. Cheers to your future endowment.
பட்டங்கள் வேலை தருவதில்லை, இவர்களை திருத்த, சட்டங்கள் இயற்றினாலும் இதை தடுப்பதற்கில்லை. இறங்கிடு தோழா மன உறிதியுடன், தொடங்கிடு தோழா சிறு தொழில் தனை, வென்றிடுவாய் நீ, பட்டங்கள் பெற்ற சிலருக்கு, நீ தந்திடுவாய் வேலை வாய்ப்பு.
ஆழமான வரிகள், அழகான கவிதை.... மனத்தை உருக்கியது.... மனிதனை திருத்த நாடு செழிக்க லஞ்சத்தை ஒழிக்க பல குரல் சேர்ந்தாலும், அவர் உணர்ந்து திருந்த வேண்டும்....... Sandhya
உண்மைதான் ராம், நமது அரசு அலுவலகங்களில் இருக்கும் அவலம் தான் இது. "திருடனைப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்று சொன்ன வரிகள் மிகவும் உண்மை. எப்போதும் போல உங்கள் கவிதை மிக அருமை