பெண்ணே உன் புருவம் வில்தான் உன் விழிபார்வை அம்புகள்தான் அதற்காக என் இதயத்தை என் பயிற்சிக் களமாக்கி விட்டாய் ? Sandhya
தங்கள் இதயத்தில் நான் இருக்கேனா? என்று பார்க்கத் தான். வாய் திறந்து நீ, சொல்லியிருந்தால், இந்த பை பாஸ், சர்ஜரியை தவிர்க்கலாமே.
சந்த்யாவின் கவிதைகளையும் அதற்கு நட்சின் பதிலையும் ரசிப்பது இனிதான பொழுது போக்கு. தொடரட்டும் உங்கள் இருவரின் பணி. கங்கா
Hi Sandhya, Indha Villu, Ambu, Payirchi kalam ellaam Just to test the strength of the love and the Lover illiya?
கண்கள் பேசும்போது, வாய் மொழிக்கு வேலை ஏது என்று எண்ணி இருந்தேன், ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் என்னையே கேள்வி கேட்டால் எப்படி...... Sandhya
அன்புள்ள சந்தியா, என்ன என்ன ஆசைகளோ, வண்ண விழிப் பார்வையிலே, என்ற பாடலை உங்களிடம் இருந்து எதிர்பார்த்து அது வராத ஏமாற்றத்தில் தான் அந்த அம்பு வந்திருக்குமோ என எனக்கொரு சிறு ஐயம். என் விழியின் மலரம்புகளை தாங்கவும் உன் இதயத்தில் வலு இல்லையா? என அவள் கேள்வி கேட்க, உன்னை வைத்திருக்கும் இதயத்தில், ஒரு மலர் கூட உன்னை காயப்படுத்தாமல் நான் காப்பேன் என அவன் பதிலும் எங்கேயோ கேட்கிறது. சந்தியா உன் மனசாட்சி குரல் எனக்கு கேட்கிறது என்று நினைக்கிறன். நல்ல azhagiya கவிதை தோழி. ரசித்து மகிழ்ந்தேன்