ஜாதி முல்லை (மல்லியா? முல்லையா?) மாலையில் மலர்ந்து மணம் வீசி மனதை மயக்கும் மந்திரவாதி எத்தகைய சித்தத்தவரையும் பித்தம் கொள்ள வைக்கும் தந்திரவாதி மின்சாரம் நின்றுபோன ஒரு இரவில்தான் தெரிந்தது எனக்கு, கீழேயும் உண்டு விண்மீன்கள் மேல ஆகாய விண்மீன்கள் கீழ மலர் செடியிலும் மின்னின இந்த மலர் மீன்கள் மொட்டாக இருக்கையில் சற்றே மங்கிய நிறமாக இருந்தாலும் மலர்கையிலே என்ன வெண்மை, அதில் மயங்காதிருக்குமா பெண்மை மாயங்கள் பல செய்யும் மலரே என்றும் நினைவில் உன் மணமே
அப்பாடி நெட் தொல்லை வேணிக்கு தீர்ந்தது, எங்களுக்கு கவிதைப் பஞ்சமும் தீர்ந்தது. முல்லையானாலும், மல்லி ஆனாலும், அழகிலும், வாசனைலும் நிறை ஒன்றே உண்டு. மல்லிக்குள்ளும் ஜாதி எங்கிருந்து வந்தது, வாசனயை விட, இந்தக் கேள்வி மனதை துளைக்கிறது.
அன்புள்ள நட்புக்கு, நண்பரே, எனக்கும் இதே போல கேள்வி வந்தது, அதற்க்கு நானே யோசித்துக்கொண்ட விளக்கம் இது. "இந்த மலர்களை கட்டிய பின் வெகு அழகாக இருக்கும். ஜதிக்கு ஆடும் கால்களில் சலங்கை போலவே, அதனால் ஜதியோடான மல்லி என்று இருந்திருக்கு. பிறகு அது மழுவி ஜாதி மல்லி ஆகி இருக்கும் என்பது எனது கருத்து." எனது கவிதை படித்து அழகான கருத்து சொன்ன நண்பருக்கு நன்றிகள் பல பல
Nice kavithai veni avargale. neengal solvathu pol jaathi mullai endru ninaithal udane ninaivukku varuvathu athan manam thaan. neengal varthaigalai payanpaduthum murai miga azhagaga irukkirirathu.
Hi veni....could feel the fragrance of the jathi mullai...my all time favourate...and weakness...thank you friend...write more
அன்புள்ள சில்வியா, ஜாதி முல்லைக்கு மயங்கியதில் என்னுடன் நீங்களும் சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. தங்களை இங்கே சந்தித்ததிலும் பெரு மகிழ்ச்சி. எனது கவிதை படித்து கருத்து சொன்ன புதிய தோழிக்கு நன்றிகள் பல தங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் பல தோழி
அன்புள்ள சாய், நாளும் என் கவிதைகளுக்கு நயமான பின்னூட்டம் தரும் நல்ல தோழிக்கு நன்றிகள் பல. மனதை மயக்கும் மலரின் மனம் இனிமைதான் தோழி
Lovely poem on Fragrant Jaathi Mullai Azhagu poo enakkum romba pidikkum Anaal en furnace udambukku naan athai soodi sila mani nerangalileye heat thaangaamal vaadi vidum. Adhanaal jaathi naan sooduvathai vida athan azhagayum vaasathayum thaan rasippeyn.