முதல் முதலாய் என் மனம் புகுந்த கள்வனின் பெயரை..! காற்றிடம் கேட்டேன்... காணவில்லை என்றது!!! நீரிடம் கேட்டேன்.... நினைவில் இல்லை என்றது!! நெருப்பிடம் கேட்டேன்..... சொல்ல நேரமில்லை என்றது!! நிலத்திடம் கேட்டேன்..... நீயே தெரிந்துகொள் என்றது...!! இறுதியாய் வானம் பார்த்து கேட்டேன்..... என்னவனை தெரியுமா என்று? பதில் கூறியது அதன் கண்ணீர் துளிகளால்!!! உன்னவனிடம் நீ கொண்ட காதல் கண்டு மெய் சிலிர்த்தேன் என்று!!!
மழை துளி கொண்டு காதல் சொன்ன yaamini, உன் கவிதை superb:thumbsup மழை துளியும் ஒரு காதல் பைத்தியம் தெரியுமா.... பூமியிடம் காதலை சொல்ல ஓவொறு முறையும் ஓடோடி வந்து காதலை சொல்ல முடியாமல் பூமியோடு சேர்ந்து காதலை வாழவைக்கிறது
அன்புள்ள யாமினி, அவன் யாரோ, யவரோ, யாருக்குமே தெரியவில்லை. பஞ்ச பூதங்களில் வானுக்கு மட்டுமே சற்றே பரந்த மனம் கொஞ்சம் இளகிய மனமும் கூட. கண்ணீர் கொண்டு விட்டது போல காதல் கொண்ட பெண்ணின் கதறலைக் கேட்டு. இதயத்தை கவர்ந்த கள்வன் இருக்கும் இடம் தெரியாமல் போன மாயம்தான் என்ன? ?? நல்ல கவிதை யாமினி. ரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி.
Yams, Aindhu bhoodhangalai ketta neengal, manadhai kaetteergala..adhu solli vittadhaa, manadhai kavardha kalvanin paerai? Sandhya, ungal fbaiyum rasithen. sriniketan