என்னவனே !! என்னை வெளியே தேடாதே..... நான் முழுமையாய் நிறைந்திருப்பதும் கரைந்திருப்பதும் உன் சுவாசத்தில்தான் உன் சுவாசத்தில் மட்டும் தான்..... இனி எப்பொழுதும் பிறந்தாலும் உன்னவளாய் பிறக்கும் இறந்தாலும் உனது மடியிலேயே விழி மூடும் பிறவியே வேண்டும்....
dear shreya, Unnavanai patri therindida Idai vida azhagana varigal thevayillai. Indru pol endrum vaazhga!!!! ganges
அன்புள்ள சந்தியா, உங்கள் காதலை நானும் காதலிக்கிறேன். இதுவன்றோ காதல்!!! பிறந்தால் உனக்காக பிறக்க வேண்டும். இறந்தாலும் உன் மடி மீது இறக்க வேண்டும். ஆனால் நீ இறந்து விட்டால் பாவம் உன் காதலன் என்னம்மா செய்வார்? நாங்களும் என்ன செய்வோம் இப்படி அருமையான கவிதை கிடைக்க????
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை! இது எந்த உறவுக்கும் பொருந்துமன்றோ??!! உன்னை முழுமையாக ஆட்கொண்டவனை நீ பார்க்கும் கன்ணோட்டம் பெண்மைக்கே பெருமை! அன்புடன் சித்ரா
சந்தியா, பிறத்தல் உனக்காக வேண்டும், இறத்தல் உன் மடியினில் வேண்டும். இதுபோல் விண்ணப்பித்தால், அவன் சுவாசத்தில் கரைந்த நீ, அவனது சுவாசத்தையும் கொண்டு செல்வாய். இருவரும் இதமாக சுவாசித்து, இனிதே வாழ வாழ்த்துக்கள்.