அன்னையும் தந்தையும் அன்பை பொழிந்து... மாற்றானிடம் விட்டு செல்வார்கள்!! இதன் பெயர் கடமை!! பேசி சிரித்து பிணைந்து இருந்த தோழிகள் பிரிந்து செல்வார்கள் பதினேழு வயதில்!! இதன் பெயர் வாழ்க்கை பயணம்!! இருப்பினும் நிலையானது ஒன்று தான் இந்த பூமி !!! அங்கும் கூட நிலையற்ற மனிதர்களின் ஜீவனம்!!:spin:spin
ஆகா நன்று யாமினி. கடமை ஆக வாழாமல், கனிவோடு வாழ்ந்தால், வாழ்க்கைப் பயணம், நிலைப் பெற்றிடுமே. இந்த நிலையற்ற நிலமையை, கொஞ்சம் மாற்றிடலாமே இந்த பூமியில்.
அன்புள்ள யாமினி, வாழ்கை நிலையற்றது. வாழுமிடமும் நிலையற்றது. ஆனாலும், வாழும் காலத்தில் நாம் வாழும் விதம் மூலம், மக்கள் மனதில் நீங்கா இடம் பெற முடியும். அந்த இடம் நிரந்தரம். காந்தி, நேரு, இந்திரா, பாரதி, என எத்தனை பேர் இல்லை. மறைந்தாலும் நம் மனதில் நீங்கள் இடம் கொண்டவர்கள் அல்லவா????? நல்ல கருத்துக்கு நல்ல தலைப்பு தோழி. நலமான உங்கள் சிந்தனைகளை பலவாறு காண நாங்கள் காத்திருக்கிறோம்
dear yams, Vazhkkaiyum nilaiyanadu illai. Vaazhum inda Bhumiyum ippodu nilayanada endru theriyavillai ( sunamigalalum, boogambangalalum). Irundalum vaazhum natkalil nilayaga vaazhnduvittu povome. ganges
வாழ்க்கை நிலையானதா? வாழும் பூமி நிலையானதா? என்பதை விட என் கவிதைகளுக்கு அழகிய கருத்துக்கள் எழுதும் உங்கள் அனைவரது தோழமையே நிலையானதாய் இருக்க விரும்பும் உங்கள் அன்பு தோழி!!! யாமினி!!!:cheers
நிலையற்ற நிலை என்று பார்த்தவுடன் நீங்கள் மனிதனை தானே கூற போகிறீர்கள் என்று நினைத்தேன் சரி தான் ஆனால் இந்த ஒரு படைப்பை பார்த்தவுடன் நம்மை பற்றி கூறியது படித்து சிறு அலைஓசை என் மனதில் .... நன்றி .... கொஞ்சம் காமெடியா நிலை யானது என்று எதை நீங்கள் கூறினீர்களோ அதுவும் நிலையல்லவே ... கொஞ்சம் 2012 சினிமா பாருங்கோ .....