கனிந்த காதல் கண்கள் கலந்தன இதயங்கள் ஒன்றின மௌனம் மொழியானது சிந்தனை சீரானது கவிதை வாழ்வானது வாழ்கை வசந்தமானது இன்பம் இரட்டிப்பானது துன்பம் அர்த்தமில்லாமல் போனது
என் கவிதை தலைப்பின் போட்டி தலைப்பிலான உங்கள் கவிதை மிக அருமை!!! நானும் கனிந்த காதல பத்தியே எழுதி இருக்கலாமோ??????:roll::roll:
படிக்க நண்பர்கள் இருக்க, மனம் லேசாகித்தான் போகிறது. பாராட்ட நண்பர்கள் இருக்க, வாழ்க்கை வழமாகித்தான் போகிறது. உலகத்தின் அழகு, உறவுகளின் சுகம், கிடைத்த சந்தோஷத்தில், கற்பனை சிறகெடுத்துப் பறக்க, கவிதை வசமானது உண்மை தான்.
யாமினி, உங்கள் கனியாக் காதலை, படித்த பின் படைத்ததே, இந்தக் கனிந்த காதல். -Ve, +Ve எல்லாம் நிறைந்ததே கவிதை, இது தவறு, அது தவறு என்ற எண்ணமே வேண்டாம். படைப்பாளிக்கு வரை முறைகள் கிடையாது, ஆனால் நெறி முறைகள் உண்டு. வாழ்த்தியமைக்கு நன்றி, மென் மேலும் படைத்திடுங்கள்.
அன்புள்ள நட்ஸ்!! எனக்கும் தெரியும்பா!! கவிதைகள்ல வெறும் பாசிடிவ் ஆனது மட்டும் இருந்த அப்பறம் அதற்கு எதிர் மறையான மனநிலமைல இருகரவங்கலாலா அதா ரசிக முடியாது சில நேரங்களில்..... நான் எப்பொழுதும் இரண்டையுமே ரசிகிரவ!! ஆனா உண்மையாவே என்னோட கனியா காதலா விட உங்க கனிந்த காதல் என்ன மட்டும் இல்ல எல்லாரையும் கவர்ந்து இருக்கும்ன்றது என் அபிப்ராயம் அதான் அப்படி சொன்னேன் நண்பா!!!!